
சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் மற்றும் அகான்ஷா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
பிஎஸ்ஏ சார்பில் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி பிலிப்பின்ஸின் மகாட்டி சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் தனது முதல் சுற்றில் சகநாட்டவரான ரவி தீக்ஷித்துடன் மோதினார்.
இதில், அபய் சிங் 11-5, 11-8, 11-8 என்ற நேர் செட்களில் ரவி தீக்ஷித்தை தோற்கடித்தார்.
அதேபோன்று, மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அகான்ஷா சலுங்கே மலேசியவின் நஜியா ஹனிஸுடன் மோதினார்.
இதில், அகான்ஷா சலுங் 3-11, 11-9, 13-11, 7-11, 11-9 என்ற செட் கணக்கில் நஜியா ஹனிஸை தோற்கடித்தார்.
வெற்றிப் பெற்ற இருவரும் அடுத்த சுற்றான காலிறுதி சுற்றிற்கு முன்னேறியுள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.