இந்திய அணியை பந்தாடியது சென்னை அணி;

Asianet News Tamil  
Published : Apr 12, 2017, 11:15 AM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
இந்திய அணியை பந்தாடியது சென்னை அணி;

சுருக்கம்

Indian team Chennai team pantatiyatu

சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்துப் போட்டியில் இந்தியன் வங்கி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பந்தாடி வெற்றிப் பெற்றது சென்னை சிட்டி எஃப்சி அணி.

சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில், செயின்ட் ஜோசப் குழுமம் - சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சென்னை லீக் கால்பந்துப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில், நேற்றைய ஆட்டத்தில் சென்னை சிட்டி எஃப்சி - இந்தியன் வங்கி அணிகள் எதிர்கொண்டன.

இந்த ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு சென்னை அணிக்கே கிடைத்தது. முதல் வெற்றி முற்றிலும் வெற்றி என்பது போல வெற்றி சென்னைக்கே கிடைத்தது.

இறுதி ஆட்டத்தின் முதல் பாதி நேர முடிவுக்குப் பிறகு வழங்கப்பட்ட கூடுதலான மூன்று நிமிடத்தில் சென்னை வீரர் சூசை ராஜ் கோல் அடிக்க, சென்னை சிட்டி எஃப்சி 1-0 முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்த நிலையில், 89-ஆவது நிமிடத்தில் இந்தியன் வங்கி வீரர் அபியோடன் ஒலாஸ்டோ ஜோசப் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

இதனையடுத்து போட்டி நேர முடிவுக்குப் பின் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் சென்னை வீரர் ஜாசெப் ஐ கெசுக்கு ஒரு கோல் அடித்து சென்னை அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

இதனால், சென்னை சிட்டி எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து