
ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சோனியா லேதர் மற்றும் நீரஜ் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி வியட்நாமில் நடைபெற்று வருகிறது. இதில், 57 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றுள்ள இந்தியாவின் சோனியா லேதர் தனது காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் ஜப்பானின் குரோகி கானாவை வீழ்த்தினார். லேதர் தனது அடுத்த சுற்றில் சீனாவின் யின் ஜுன்ஹுவாவுடன் இன்று மோதுகிறார்.
இதேபோல், 51 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டுள்ள இந்தியாவின் நீரஜ், மியான்மர் வீராங்கனை நாலி நாலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
அரியாணாவைச் சேர்ந்த நீரஜ், ஆசிய மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பது இதுவே முதல் முறை.
நீரஜ் தனது காலிறுதியில் தென் கொரியாவின் பாங் சோல் மியை எதிர்கொள்கிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.