
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் விளையாடிய இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்று நேற்று இரவு நடைபெற்றது.
இதில், இந்தியாவின் சிந்து, ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 19-21, 22-20, 20-022 என்ற செட் கணக்கில் நஜோமி ஒகுஹராவிடம் வீழ்ந்தார் சிந்து.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு சிந்து முன்னேறியது இதுவே முதல் முறை. இறுதிச்சுற்று வரை முன்னேறியதன் மூலம், உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய 2-வது இந்தியர் என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளார்.
ஜகார்த்தாவில் நடைபெற்ற கடந்த சாம்பியன்ஷிப்பில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய முதல் இந்தியராக, சாய்னா நெவால் உள்ளார்.
இந்த உலக சாம்பியின்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு சாய்னா ஒரு வெண்கலமும், சிந்து ஒரு வெள்ளியையும் வென்று தந்துள்ளனர். உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா இரண்டு பதக்கங்களைப் பெறுவதும் இதுவே முதல் முறை.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.