
இந்தியா நியூசிலாந்து இடையே புனேவில் நடந்துவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் நியூசிலாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
புனேவில் நடந்துவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.
தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்டிலும் முன்ரோவும் களமிறங்கினர். கப்டில், 11 ரன்களில் புவனேஷ்குமார் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன், பும்ராவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதைத்தொடர்ந்து முன்ரோவும் புவனேஷ்குமார் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆகி பெவிலியன் திரும்பினார்.
கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்ட ரோஸ் டெய்லர் மற்றும் லதாம் ஜோடி இன்றும் சற்று நிதானமாக ஆடியது. ஆனால் இந்தமுறை அவர்களை பார்ட்னர்ஷிப் அமைக்க விடாத ஹர்திக் பாண்டியா, ரோஸ் டெய்லரை வெளியேற்றினார்.
இதையடுத்து நியூசிலாந்து அணி, 17 ஓவருக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் எடுத்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.