
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் நடைபெற்றது. இதில், மகளிருக்கான 48 கிலோ பிரிவில் போட்டியிட்டார் இந்தியாவின் மேரி கோம்.
அவர், இறுதிச்சுற்றில் பல்கேரியாவின் செவ்தா அசினோவாவிடம் வீழ்ந்தார். இதனால் அவர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதேபோல மகளிருக்கான 81 கிலோவுக்கு அதிகமான எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் சீமா பூனியா, ரஷியாவின் அன்னா இவானோவாவிடம் தோற்று வெள்ளியுடன் வெளியேறினார்.
இதனையடுத்து இப்போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனைகள் வென்ற பதக்கத்தின் எண்ணிக்கை 6 ஆனது.
மற்ற வீராங்கனைகளான மீனா குமாரி தேவி (54 கிலோ), சரிதா தேவி (60 கிலோ), சவீதி பூரா (75 கிலோ), பாக்யவதி கச்சாரி (81 கிலோ) ஆகியோர் தங்களது பிரிவில் அரையிறுதியில் தோற்று வெண்கலம் வென்றிருந்தனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.