
காமன்வெல்த் ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
அதன்படி காமன்வெல்த் போட்டி ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் 14-ஆம் நிலை வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பா ஆஸ்திரேலியாவின் டமிகா சாக்ஸ்பியுடன் மோதினார்.
இதில், டமிகா சாக்ஸ்பியை 11-3, 11-6, 11-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார் ஜோஷ்னா.
இதற்கிடையே மற்றொரு பிரபல வீராங்கனையான தீபிகா பல்லிக்கல் 3-11, 6-11, 2-11 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் வலுவான வீராங்கனை அலிசன் வாட்டர்ஸிடம் வீழ்ந்து வெளியேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் விக்ரம் மல்ஹோத்ரா, 6-11, 11-8, 6-11, 6-11 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் நிக் மேத்யூவிடம் போராடி தோல்வி அடைந்து வெளியேறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.