தோனிக்கு தொடர்ந்து நான்காவது இடம்…

Asianet News Tamil  
Published : Oct 29, 2016, 02:41 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
தோனிக்கு தொடர்ந்து நான்காவது இடம்…

சுருக்கம்

இந்திய கேப்டன் தோனி தொடர்ந்து 4-ஆவது இடத்திலேயே களமிறங்க வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்தார்.

நியூசிலாந்திற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் தோனி 4-ஆவது இடத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், கங்குலி கூறியதாவது: “தோனி தொடர்ந்து 4-ஆவது இடத்திலேயே களமிறங்க வேண்டும். அங்கிருந்து அவர் ஆட்டத்தை வெற்றியில் முடிக்க வேண்டும். ஆட்டத்தை வெற்றியில் முடிக்கக்கூடிய ஒரு வீரர் 40-ஆவது ஓவருக்குப் பிறகுதான் களமிறங்க வேண்டும் என்று அர்த்தமில்லை.

விராட் கோலி இப்போது 3-ஆவது இடத்தில் களமிறங்கி வெற்றி தேடித் தருகிறார். ஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரர் பின்வரிசையில்தான் களமிறங்க வேண்டும் என்பது தவறான உத்தியாகும். எனவே வரக்கூடிய ஆட்டங்களில் தோனி 4-ஆவது வீரராகவே களமிறங்க வேண்டும் என்றார்.

விராட் கோலி குறித்துப் பேசிய கங்குலி, "கோலி தலைசிறந்த வீரர்தான். ஆனால் அவரை மட்டுமே நம்பியிருப்பது என்பது சரியானதல்ல.

நியூசிலாந்தும் தலைசிறந்த அணிதான். அவர்களும் சில ஆட்டங்களில் வெல்லக்கூடும்' என்றார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ: ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கில், ஐயர் மீண்டும் சேர்ப்பு
இந்து அமைப்புகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்த BCCI, KKR..! வங்கதேச வீரருக்கு ஆப்பு..