இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு முதல் முறையாக வெளிநாட்டுப் பயிற்சியாளர் நியமனம்...

 
Published : May 25, 2017, 10:56 AM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு முதல் முறையாக வெளிநாட்டுப் பயிற்சியாளர் நியமனம்...

சுருக்கம்

Foreign coach appointed for first time for Indian boxers

இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு பிரான்ஸைச் சேர்ந்த ஸ்டீபன் கோட்டாலோர்டா என்ற வெளிநாட்டுப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இது முதல்முறையாகும்.

இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக குருபாக்ஸ் சிங் சாந்து நீண்டகாலமாக செயல்பட்டு வந்தார்.

தற்போது இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு பிரான்ஸைச் சேர்ந்த ஸ்டீபன் கோட்டாலோர்டா என்ற அந்த பயிற்சியாளர் இந்திய மகளிர் அணிக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்கவுள்ளார்.

இவர், வரும் ஜூன் முதல் வாரத்தில் பொறுப்பேற்கவுள்ளார்.

இதேபோல, இத்தாலியின் ரஃபேல் பெர்கமாஸ்கோ இளம் வீராங்கனைகளுக்கான பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வியத்நாமில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியே புதிய பயிற்சியாளர் தலைமையில் இந்திய மகளிர் அணி எதிர்கொள்ளும் முதல் போட்டியாகும்.

சர்வதேச குத்துச்சண்டை சங்கமான ஏஐபிஏவின் 3 நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ள ஸ்டீபன், ஐரோப்பிய குத்துச்சண்டை கூட்டமைப்பின் பயிற்சியாளர்கள் குழு உறுப்பினராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சேப்பாக்கம் டூ சின்னசாமி.. தென்னிந்தியாவை மறந்ததா பிசிசிஐ?.. ரசிகர்கள் எழுப்பும் முழக்கம்!
இஷான் கிஷன் ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. முதல் SMAT பட்டத்தை வென்று ஜார்க்கண்ட் சாதனை..!