தீபா மாலிக்கிற்கு ரூ.4 கோடி பரிசு வழங்கினார் மோடி…

Asianet News Tamil  
Published : Nov 03, 2016, 01:38 AM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
தீபா மாலிக்கிற்கு ரூ.4 கோடி பரிசு வழங்கினார் மோடி…

சுருக்கம்

பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக்கிற்கு ரூ.4 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

அரியாணா மாநிலம் குர்கானில் நடைபெற்ற ஹரியாணா பொன்விழா நிகழ்ச்சியில் தீபாவுக்கு அந்த காசோலை வழங்கப்பட்டது. மேடையில் இருந்த மோடி, சக்கர நாற்காலியில் வந்த தீபாவுக்காக சில படிகள் இறங்கி வந்து அதனை வழங்கி கெளரவித்தார். உடன், அரியாணா ஆளுநர் கப்தான் சிங் சோலங்கி, முதல்வர் மனோகர் லால் கட்டர், மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோர் இருந்தனர்.

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ள தீபா, குண்டு எறிதல் போட்டியில் 4.61 மீ. தூரம் எறிந்து இரண்டாம் இடம் பிடித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

'இந்தியாவில் கால் வைத்தால்'.. KKR வங்கதேச வீரருக்கு பாஜக மிரட்டல்.. ஷாருக்கான் தேசத் துரோகி.. விமர்சனம்!
'அவர் கதவைத் தட்டவில்லை, உடைக்கிறார்'; சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சர்பராஸ் கான் வேண்டும்: அஸ்வின்