கோப்பையை வைத்து பூஜையை போட்ட சிஎஸ்கே நிர்வாகம்!!

 
Published : May 29, 2018, 03:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
கோப்பையை வைத்து பூஜையை போட்ட சிஎஸ்கே நிர்வாகம்!!

சுருக்கம்

csk franchisees do pooja for ipl cup in temple

சென்னை அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. சென்னை அணி வென்ற ஐபிஎல் கோப்பையை வைத்து அணி நிர்வாகிகள், சென்னை தி.நகர் பெருமாள் கோவிலில் பூஜை செய்தனர்.

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு ஐபிஎல் 11வது சீசனில் தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, வாட்சனின் அதிரடியால் கோப்பையை வென்று அசத்தியது. 

கோப்பையுடன் நேற்று சென்னை வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டு, நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். அணி நிர்வாகத்தினர், நிர்வாகத்தினருக்கு நெருங்கியவர்கள் ஆகியவர்களுடன் வீரர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. 

அதன்பிறகு இன்று காலை சென்னை அணியின் நிர்வாகிகள், தி.நகரில் உள்ள பெருமாள் கோவிலில் கோப்பையை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.


 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?