
ஆஸ்திரேலியா ஓபன் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், சமீர் வர்மா, மனு அட்ரி - சுமித் ரெட்டி இணை மற்றும் அர்ஜுன் - ராமச்சந்திரன் இணை காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
ஆஸ்திரேலியா ஓபன் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டங்களில் சாய் பிரணீத் 21-12, 21-14 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் அகமது மெளலானாவை வென்றார்.
காலியிறுதியில் இந்தோனேசியாவின் லீ சிக்யுவை சந்திக்கிறார் பிரணீத்.
அதேபோன்று, சமீர் வர்மா 21-16, 21-12 என்ற செட் கணக்கில் ஜப்பானின் டகுமா எடாவை வென்றார்.
காலியிறுதியில் சீனாவின் லு குவாங்குவை சந்திக்கிறார் சமீர்வர்மா.
அதேபோன்று, இரட்டையர் பிரிவில் மனு அட்ரி - சுமித் ரெட்டி இணை 21-17, 21-17 என்ற செட் கணக்கில் கொரியாவின் யுக் யுன் சொய்யை வென்றனர்.
மற்றொரு இரட்டையர் பிரிவில் அர்ஜுன் - ராமச்சந்திரன் இணை 21-15, 25-23 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஒகமுரா - மகாயுகி நொடரோ இணையை வென்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.