
ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-கனடாவின் ஆதில் ஷமாஸ்தீன், பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி பிரிட்டனின் இல்க்ளே நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் - கனடாவின் ஆதில் ஷமாஸ்தீன் ஜோடி தங்களின் முதல் சுற்றில் 4-6, 6-4, 12-10 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் மட் ரெய்ட் - ஜான் பேட்ரிக் ஜோடியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.
பயஸ் - ஆதில் ஜோடி தங்களின் காலிறுதியில் பெலாரஸின் ஆன்ட்ரே வாஸிலெவ்ஸ்கி -சிலியின் ஹன்ஸ் காஸ்டில்லோ ஜோடியை எதிர்கொள்கிறது.
மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் பூரவ் ராஜா - திவிஜ் சரண் ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் டொமினிக் குடியரசின் எஸ்டரெல்லா - பர்படாஸின் டேரியன் கிங் ஜோடியைத் தோற்கடித்து வென்றது.
பூரவ் - திவிஜ் ஜோடி தங்களின் காலிறுதியில் தாய்லாந்தின் சஞ்சய் ரதிவதனா - சஞ்சத் ரதிவதனா ஜோடியுடன் மோதுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.