அகில இந்திய கூடைப்பந்து: இரண்டாவது நாளில் வெற்றிப் பெற்ற அணிகள் இதோ…

 
Published : Aug 29, 2017, 09:39 AM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
அகில இந்திய கூடைப்பந்து: இரண்டாவது நாளில் வெற்றிப் பெற்ற அணிகள் இதோ…

சுருக்கம்

All Indian basketball Here are the winning teams in the second day ...

பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டியின் 2-வது நாள் ஆட்டங்களில் ஆர்.சி.எஃப்., புணே இந்திய ராணுவ அணி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றிப் பெற்றன.

பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 53-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை கோவையின் தொடங்கியது.

பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 2-வது நாளான நேற்று முதல் ஆட்டத்தில் கபூர்தலா ஆர்.சி.எஃப். - சென்னை அரைஸ் ஸ்டீல் அணிகள் மோதின.

இதில், 96-88 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை அரைஸ் ஸ்டீல் அணியை வீழ்த்தி ஆர்.சி.எஃப். அணி, வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில், புணே இந்திய ராணுவ அணியை எதிர்த்து கேரள மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில், ராணுவ அணி 84-66 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள மின்வாரிய அணியை வீழ்த்தியது.

மூன்றாவது போட்டியில், சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து சென்னை சுங்கத் துறை அணி மோதியது.

இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 82-71 என்ற புள்ளிகள் கணக்கில் சுங்கத் துறை அணியை வீழ்த்தியது.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Ind vs NZ: கோலி, ரோகித் இன்.. 3 வீரர்களுக்கு கல்தா கொடுத்த தேர்வு குழு..?
ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?