பயாஸுடன் இணைந்து விளையாடவுள்ள 110-வது வீரர்…

Asianet News Tamil  
Published : Oct 25, 2016, 02:17 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
பயாஸுடன் இணைந்து விளையாடவுள்ள 110-வது வீரர்…

சுருக்கம்

கேபிஐடி - எம்எஸ்எல்டிஏ ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி புணேவில் திங்கள்கிழமை தொடங்குகிறது.

இதில் இரட்டையர் பிரிவில் ராம்குமாருடன் இணைந்து களமிறங்குகிறார் இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ். கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக ஏடிபி சேலஞ்சர் போட்டியில் விளையாடவுள்ளார் பயஸ். முன்னதாக 1997 டிசம்பரில் ஆமதாபாதில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் பயஸ் விளையாடினார்.

இரட்டையர் தரவரிசையில் 59-ஆவது இடத்தில் இருக்கும் பயஸ், தரவரிசையில் ஏற்றம் பெறும் வகையிலும், தனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் ஏடிபி சேலஞ்சர் போட்டியில் களமிறங்குகிறார்.

இரட்டையர் பிரிவில் பயாஸுடன் இணைந்து விளையாடவுள்ள 110-ஆவது வீரர் ராம்குமார் ஆவார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Virat Kohli: டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை..! அலெக்ஸ் ஹேல்ஸை சமன் செய்த கிங் கோலி..!
PBKS vs RCB: முதல் அணியாக பிளேஆஃப்க்குள் கெத்தாக நுழைந்தது ஆர்சிபி! பஞ்சாப் பரிதாபம்!