
கேபிஐடி - எம்எஸ்எல்டிஏ ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி புணேவில் திங்கள்கிழமை தொடங்குகிறது.
இதில் இரட்டையர் பிரிவில் ராம்குமாருடன் இணைந்து களமிறங்குகிறார் இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ். கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக ஏடிபி சேலஞ்சர் போட்டியில் விளையாடவுள்ளார் பயஸ். முன்னதாக 1997 டிசம்பரில் ஆமதாபாதில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் பயஸ் விளையாடினார்.
இரட்டையர் தரவரிசையில் 59-ஆவது இடத்தில் இருக்கும் பயஸ், தரவரிசையில் ஏற்றம் பெறும் வகையிலும், தனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் ஏடிபி சேலஞ்சர் போட்டியில் களமிறங்குகிறார்.
இரட்டையர் பிரிவில் பயாஸுடன் இணைந்து விளையாடவுள்ள 110-ஆவது வீரர் ராம்குமார் ஆவார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.