#ENGvsIND முதல் அடியை அவரு கொடுத்துட்டாரு.. பதிலடியை கோலி எப்படி கொடுக்குறாருனு பார்ப்போம்! ஜாகீர் கான் ஆர்வம்

By karthikeyan VFirst Published Aug 8, 2021, 9:52 PM IST
Highlights

கோலி - ஆண்டர்சன் இடையேயான போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில், முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது, கோலி - ஆண்டர்சன் இடையேயான போட்டி தான்.

கோலிக்கும் ஆண்டர்சனுக்கும் இடையேயான போட்டி பார்க்க நன்றாக இருக்கும். இங்கிலாந்தின் அனுபவமிக்க பவுலரான ஆண்டர்சனின் பவுலிங்கில் விராட் கோலி நன்றாக ஆடி ஸ்கோர் செய்திருக்கிறார். அதேவேளையில், விராட் கோலியை அதிகமுறை ஆண்டர்சன் அவுட்டும் ஆக்கியிருக்கிறார்.

எனவே இந்த தொடரில் இங்கிலாந்தில் ஆண்டர்சனின் ஸ்விங்கை கோலி எப்படி எதிர்கொண்டு ஆடுகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார் கோலி. முதல் டெஸ்ட்டில் மழையால் 2வது இன்னிங்ஸில் விராட் கோலி பேட்டிங் ஆடும் வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்த போட்டியும் டிராவில் முடிந்தது.

இந்நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் ஆண்டர்சனின் பவுலிங்கை கோலி எப்படி எதிர்கொள்வார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ஜாகீர் கான், 2018ல் ஆண்டர்சன் மீது விராட் கோலி ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் இந்த தொடரில் முதல் அடியை ஆண்டர்சன் கொடுத்துவிட்டார். அதற்கு விராட் கோலி எப்படி பதிலடி கொடுப்பார் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
 

click me!