பாகிஸ்தான் பண்ணது முட்டாள்தனம்.. ஆஸ்திரேலியாவுக்காக உண்மையாவே சந்தோஷப்படுறேன்..! அக்தர் அதிரடி

By karthikeyan VFirst Published Mar 26, 2022, 6:09 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை டிரா செய்ய முனைந்த பாகிஸ்தானின் செயல் முட்டாள்தனமானது என்று ஷோயப் அக்தர் விளாசியுள்ளார்.
 

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகள் டிராவான நிலையில், கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. 

ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் டிராவாகின. ராவல்பிண்டி மற்றும் கராச்சி ஆகிய 2 ஆடுகளங்களும் படுமந்தமாக இருந்ததால் கடும் விமர்சனத்துக்குள்ளாகின.

இந்த டெஸ்ட் தொடர் டிரா தான் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை ஜெயித்தது.

இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் அணுகுமுறையை  கடுமையாக விமர்சித்துள்ளார் ஷோயப் அக்தர். இதுகுறித்து பேசிய ஷோயப் அக்தர், மிகவும் ஏமாற்றமான தொடர் இது. பாகிஸ்தான் அணியின் அணுகுமுறை முட்டாள்தனமானது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அணி நிர்வாகம் இந்த தொடரை டிரா செய்யத்தான் நினைத்தது. 

ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு தலைவணங்குகிறேன். உண்மையாகவே அவர்களுக்காக நான் சந்தோஷப்படுகிறேன். இந்த தொடரில் இடம்பெற்று ஆடிய எந்த ஆஸ்திரேலிய வீரரும் இதற்கு முன் பாகிஸ்தானில் ஆடியதே இல்லை. ஆனால் இந்த டெஸ்ட் தொடரில் துணிச்சலாக ஆடினர் என்று அக்தர் தெரிவித்தார்.
 

click me!