உலக கோப்பை அணியில் 4ம் வரிசையில் விஜய் சங்கர்!! ஆடும் லெவனில் அசைக்க முடியாத இடம்

By karthikeyan VFirst Published Mar 13, 2019, 3:23 PM IST
Highlights

இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர். 
 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர். 

நான்காம் வரிசை தான் இன்னும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு, ஆஸ்திரேலிய தொடரில் படுமோசமாக சொதப்பினார். ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடிய நிலையில், நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் படுமோசமாக சொதப்பினார். அவரது ஆட்டத்தில், அவர் தன்னம்பிக்கையுடன் இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், ராயுடு ஃபார்மில் இல்லாதது அணிக்கு பெரிய ஏமாற்றம். 

நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ஆடிய ராயுடு, வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து நான்காவது போட்டியில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பேட்டிங் சரியாக ஆடாதது மட்டுமல்லாமல் அவரது ஃபீல்டிங்கும் சரியில்லை.

உலக கோப்பை நெருங்கிய நிலையில், அவர் சொதப்பிவருவதால் உலக கோப்பையில் அவருக்கான இடம் சந்தேகம்தான். ராயுடு சொதப்பிவரும் அதேவேளையில், ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடுகிறார். எனவே அவரைக்கூட நான்காம் வரிசையில் இறக்கலாம். அப்படி செய்தால் ஒரு பவுலிங் ஆப்சனும் கூடுதலாக கிடைக்கும். 

இந்த கருத்தைத்தான் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரும் தெரிவித்துள்ளார். உலக கோப்பைக்கான அணியை பல முன்னாள் வீரர்களும் தேர்வு செய்துவரும் நிலையில், சஞ்சய் மஞ்சரேக்கரும் 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் ராயுடுவை சேர்க்கவே இல்லை. நான்காம் வரிசையில் விஜய் சங்கரை இறக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, விஜய் சங்கர் ஆகிய மூன்று ஆல்ரவுண்டர்களையும் அணியில் எடுத்துள்ளார். மாற்று தொடக்க வீரராக ராகுலையும் மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டையும் தேர்வு செய்துள்ளார் மஞ்சரேக்கர். 

அதேபோல் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஆடும் லெவனில் ஷமியை இறக்கலாம் என்பது மஞ்சரேக்கரின் கருத்து. தற்போதைய சூழலில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஷமியை பும்ராவுடன் இறக்கலாம் என்றும் புவனேஷ்வர் குமாரை பென்ச்சில் உட்கார வைக்கலாம் என்றும் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். 

மஞ்சரேக்கர் தேர்வு செய்த உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித், தவான், கோலி(கேப்டன்), விஜய் சங்கர், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், ஷமி, பும்ரா, புவனேஷ்வர் குமார், ரிஷப் பண்ட், ஜடேஜா, கேஎல் ராகுல்.
 

click me!