
Rinku Singh scores a century in 45 balls: உத்தரப் பிரதேசத்தில் யுபி டி20 லீக் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ மைதானத்தில் நடைபெற்ற கோரக்பூர் லயன்ஸ் மற்றும் மீரட் மாவரிக்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், மீரட் அணியின் கேப்டன் ரிங்கு சிங் அபாரமாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்ததுடன் சதமும் அடித்தார். ஆசிய கோப்பை 2025ல் தேர்வான பிறகு அவருக்கு இந்த சதமும், ஆட்டத்திறனும் மிகவும் முக்கியமானது. இதன் மூலம் அவரது பார்ம் உச்சத்தை எட்டியுள்ளது.
45 பந்துகளில் சதம் விளாசிய ரிங்கு சிங்
ரிங்கு சிங் 45 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உதவியுடன் சதமடித்து, 48 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ரிங்கு சிங் தனது அணியை 7 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெறச் செய்தார். சமீபத்தில் ஆசிய கோப்பை 2025க்கான அணியில் ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டார். கடந்த எட்டு டி20 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் எடுக்காததால் அவரது தேர்வு குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி
ஆனால் இப்போது அவர் தனது பேட்டிங்கின் மூலம் அவர் ஏன் இந்த அணியில் தேர்ந்தெடுக்கப்பட தகுதியானவர் என்பதை நிரூபித்துள்ளார். யுபி டி20 லீக்கில் கோரக்பூர் லயன்ஸ் மற்றும் மீரட் மாவரிக்ஸ் அணிகளுக்கு இடையேயான 9வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோரக்பூர் லயன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. 38 ரன்களுக்குள் அவர்களது 4 விக்கெட்டுகள் சரிந்தன. அதன் பிறகு ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த கேப்டன் ரிங்கு சிங், சாஹப் யுவராஜுடன் இணைந்து 65 பந்துகளில் 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
ரிங்குவின் அதிரடியால் மீரட் அணி வெற்றி
இதில் ரிங்கு சிங் மைதானத்தின் நான்கு புறமும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசி 48 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சாஹப் யுவராஜ் 22 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இவ்விருவரின் சத பார்ட்னர்ஷிப் காரணமாக மீரட் அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.