Yasir Shah: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ.. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது வழக்குப்பதிவு

By karthikeyan VFirst Published Dec 20, 2021, 9:14 PM IST
Highlights

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்ததாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 35 வயது லெக் ஸ்பின்னரான யாசிர் ஷா மீது சிறுமி ஒருவர் அளித்த புகாரின் பேரில் இஸ்லாமாபாத் போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

14 வயது சிறுமி ஒருவர், யாசிர் ஷாவின் நண்பர் ஃபர்ஹான் என்பவர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதற்கு உடந்தையாக இருந்த யாசிர் ஷா, இதுதொடர்பாக புகார் அளித்தால், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தன்னை மிரட்டியதாகவும் போலீஸில் புகார் அளித்துள்ளார் அந்த சிறுமி.

சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், யாசிர் ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமாத்தின் ஷாலிமார் காவல்நிலையத்தில் யாசிர் ஷா மீது எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அந்த சிறுமி, இதுதொடர்பாக யாசிர் ஷாவை நான் வாட்ஸ் அப்பில் தொடர்புகொண்டு கூறியபோது, என்னை பார்த்து சிரித்தது மட்டுமல்லாது, அவருக்கு சிறுமிகளைத்தான் மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார். மேலும் தனக்கு (யாசிர் ஷா) பெரிய பெரிய ஆட்களை எல்லாம் தெரியும் என்றும் மிரட்டினார். யாசிர் ஷா மற்றும் அவரது நண்பர் ஃபர்ஹான் ஆகிய இருவரும் நிறைய சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவும் எடுத்து வைத்திருப்பதாக அந்த சிறுமி கூறியுள்ளார்.

லெக் ஸ்பின்னரான யாசிர் ஷா பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 235 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 25 ஒருநாள் போட்டிகளில் ஆடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். கடைசியாக, அண்மையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரை யாசிர் ஷா ஆடியிருந்தார்.
 

click me!