
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. இரு அணிகளுமே இதற்கு முன் ஆடிய 6 போட்டிகளில் தலா 4 வெற்றிகளை பெற்றுள்ளன. எனவே 5வது வெற்றியை பெறும் முனைப்பில் இன்று மோதுகின்றன.
மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய 2 அணிகளுமே நல்ல பேலன்ஸாக அணிகளாக இருப்பதுடன் பாசிட்டிவான முடிவுகளையும் போட்டிகளில் பெற்றுவருவதால் அந்த அணிகளில் மாற்றங்கள் எதுவும் செய்வதற்கான அவசியமில்லை. எனவே இரு அணிகளுமே கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.
உத்தேச ஆர்சிபி அணி:
ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினெஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல்(கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆயுஷ் பதோனி, க்ருணல் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்.