India vs England 3rd Test: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி சதம் – இந்தியா 196 ரன்கள் குவித்து 322 ரன்கள் முன்னிலை!

Published : Feb 17, 2024, 09:14 PM IST
India vs England 3rd Test: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி சதம் – இந்தியா 196 ரன்கள் குவித்து 322 ரன்கள் முன்னிலை!

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து 322 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. இதில் ரோகித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும், சர்ஃபராஸ் கான் 62 ரன்களும், துருவ் ஜூரெல் 46 ரன்களும் எடுத்தனர்.

வீரேந்திர சேவாக், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வரிசையில் அதிவேகமாக சதம் அடித்த 7ஆவது வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

பின்னர், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில், பென் டக்கெட் மட்டுமே அதிகபட்சமாக 153 ரன்கள் குவித்தார். பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியாக இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 319 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் இந்திய அணி 126 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், ரோகித் சர்மா 19 ரன்களில் ஆட்டமிழக்கவே யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20 போட்டியில் விளையாடுவது போன்று அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.

IND vs ENG 3rd Test: இங்கிலாந்து டூர்: முதல் வீரராக 400 ரன்களை கடந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை!

ஜெய்ஸ்வால் 122 பந்துகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலமாக 13 இன்னிங்ஸ்களில் விளையாடி தனது 3ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். அவர் 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். அதன் பிறகு வந்த ரஜத் படிதார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து குல்தீப் யாதவ் களமிறங்கினார். இறுதியாக 3ஆம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்து 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

India vs England 3rd Test: முகமது சிராஜ் வேகத்தில் 319 ரன்னுக்கு சரண்டரான இங்கிலாந்து!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!