எறும்பு ஊற கல்லும் தேயும்.. சீனியர் வீரருக்கு நியாயம் கிடைக்கப்போகுது

By karthikeyan VFirst Published Sep 10, 2019, 2:12 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான கங்குலி, அசாருதீன் மட்டுமல்லாது கம்பீர் ஆகியோரின் தொடர் வலியுறுத்தல்களின் விளைவாக, தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஓர் உறுதியையளித்துள்ளார். 

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான கேஎல் ராகுல் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவருகிறார். நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்ட வீரர் என்று பல முன்னாள் ஜாம்பவான்களாலும் ராகுல் புகழப்படுவது கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கிறது. ஆனால் அவரால் அணிக்கு எந்தவித பயனும் இல்லை என்று நினைக்கும் அளவிற்குத்தான் அவரது ஆட்டம் இருக்கிறது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டு போட்டியிலுமே ராகுல் படுமோசமாக சொதப்பினார். முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலுமே அவருக்கு நல்ல ஸ்டார்ட் கிடைத்தது. ஆனால் இரண்டையுமே அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. முதல் இன்னிங்ஸில் 44 ரன்களிலும் இரண்டாவது இன்னிங்ஸில் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தார். 

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சரியாக ஆடவில்லை. முதல் இன்னிங்ஸில் வெறும் 13 ரன்களில் ஆட்டமிழந்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 63 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 6 ரன்கள் மட்டுமே வெளியேறினார். இதைவிட ஒரு மோசமான இன்னிங்ஸை ஆடவே முடியாது எனுமளவிற்கு படுமோசமாக ஆடிவிட்டுச் சென்றார். 

ராகுல் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவரும் நிலையிலும், அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. ராகுல் எவ்வளவு மோசமாக சொதப்பினாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் அதேவேளையில், உலக கோப்பையில் அபாரமாக ஆடியதன் விளைவாக மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ரோஹித் சர்மாவிற்கு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே ஆடும் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. 

ரோஹித்தை டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வீரராக களமிறக்கலாம் என இரண்டு முறை அழுத்தம் திருத்தமாக தனது கருத்தை முன்னாள் கேப்டன் கங்குலி பதிவு செய்திருந்தார். கங்குலியின் கருத்தையே கம்பீரும் பிரதிபலித்திருந்தார்.

ரோஹித் சர்மாவை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்த நிலையில், வேறு வழியில்லாமல் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், ரோஹித்தை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். 

இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித், அஷ்வின் ஆகியோர் வேண்டுமென்றே ஓரங்கட்டப்படுவது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால் இவர்கள் இருவருக்கும் முன்னாள் வீரர்கள் மத்தியிலே கூட ஆதரவு அதிகம் இருக்கிறது. ரோஹித்தை டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறக்கலாம் என முன்னாள் கேப்டன்கள் கங்குலி, அசாருதீன் கருத்து தெரிவித்தனர். கம்பீரும் அதே கருத்தை தெரிவித்திருந்தார். 

தொடர்ச்சியாக இந்த வலியுறுத்தல்கள் வலுத்த நிலையில், இதுகுறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின் தேர்வுக்குழு உறுப்பினர்கள் இன்னும் கூடவில்லை. எனவே ஒரு மீட்டிங் கண்டிப்பாக இருக்கும். அதில், ரோஹித்தை தொடக்க வீரராக இறக்குவது குறித்து கண்டிப்பாக விவாதிப்போம்.
 

click me!