உலக கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்!! 15 பேரில் 2 தமிழர்கள்

By karthikeyan VFirst Published Apr 15, 2019, 3:50 PM IST
Highlights

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 
 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அணியை முதல் ஆளாக அறிவித்தது நியூசிலாந்து. இதையடுத்து ஆஸ்திரேலியாவும் 15 வீரர்களை கொண்ட அணியை அறிவித்தது. 

இந்நிலையில், சற்றுமுன் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் சிக்கலாக பார்க்கப்பட்ட நான்காம் வரிசைக்கு தீர்வு காணும் வகையில் விஜய் சங்கருக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது. மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தான் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ஒருநாள் அணியில் தினேஷ் கார்த்திக்கைவிட ரிஷப் பண்ட்டுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

ஆனால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பினார். ஆனாலும் தினேஷ் கார்த்திக் டி20 போட்டிகளுக்கு மட்டுமே எடுக்கப்பட்டதால் அவரை டி20 வீரராக மட்டுமே தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் பார்ப்பதாக ஒரு தோற்றம் இருந்தது. அதனால் ரிஷப் பண்ட்டுக்கான வாய்ப்பே இருப்பதாக தெரிந்தது. இந்நிலையில், ரிஷப் பண்ட்டை ஓரங்கட்டிவிட்டு தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுத்துள்ளனர். 

உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் என 2 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். 

உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், விஜய் சங்கர், தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப் யாதவ், சாஹல், ஜடேஜா. 

click me!