உங்கள் ராசிக்கு நீங்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ?

By Dinesh TGFirst Published Sep 17, 2022, 4:07 PM IST
Highlights

ஒருவருடைய ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்தை வைத்து அவருக்கு அதிர்ஷ்டம் எப்படி வரும் என்பதையும், அதற்கான பரிகாரங்களையும் கூறலாம். அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்தால் அதிர்ஷ்டம் கைகூடும் என்பதைப் பார்ப்போம்:
 

மேஷம்: சித்தர்களுடைய ஜீவ சமாதிக்கு சென்று வருவதும் முன்னோர்கள் வழிபாட்டினை மேற்கொள்வதும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். மேலும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொள்வது நன்மை அளிக்கக்கூடிய பரிகாரம்.

ரிஷபம்: விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும். நீல நிற ஆடை அதிர்ஷ்டத்தை அழைத்து வரும்.

மிதுனம்: பைரவர் வழிபாடு, தடைகளை நீக்கி அதிர்ஷ்டத்தை தரும். கொடுக்கும். பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுவது மிகுந்த நன்மைகளைக் கொடுக்கும். அடர் நிற ஆடைகளை அணிவது சிறப்பு.

கடகம்: முருகன் வழிபாடும், கந்த சஷ்டி கவசம் பாராயணமும் நன்மை தரும். மேலும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து கொள்வது மிகுந்த நன்மையை கொடுக்கும்.

சிம்மம்: சிவ வழிபாடு மிகுந்த நன்மை தரும். சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் அதிர்ஷ்டம் அடிக்கும். கருப்பு நிற ஆடைகளைத் தவிருங்கள்.

கன்னி: சுமங்கலி வழிபாடு, ஐயப்பன் வழிபாடு அதிர்ஷ்டத்தை அளிக்கும் பரிகாரமாகும். வெள்ளை நிற ஆடை அணிவது அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும்.

துலாம்: பெருமாள் வழிபாடு அளவற்ற நன்மையைக் கொடுக்கும். நீல நிற ஆடை அதிர்ஷ்டத்தை அழைத்து வரும்.

விருச்சிகம்: அம்பாள் வழிபாடும், அம்மன் கோயில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதும் நன்மை தரும். அபிராமி அந்தாதி பாராயணம், பௌர்ணமி பூஜைகளில் கலந்து கொள்வதும் அதிர்ஷ்டத்தை தரும்.

தனுசு: சிவ வழிபாடு, பிரதோஷ வழிபாடு சிறப்பு. குலதெய்வ வழிபாடு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.

மகரம்: பெருமாள் வழிபாடு செய்வது, பெருமாள் கோயிலில் உழவாரப் பணிகளில் ஈடுபடுவது அதிர்ஷ்டத்தை தரும். ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு உதவுவது அதிர்ஷ்டத்தை அழைத்து வரும் பரிகாரமாகும்.

கும்பம்: மகாலட்சுமி வழிபாடும், அம்பாள் வழிபாடும் மிகுந்த நன்மை தரும். விசேஷ நாட்களில் அம்பாள் கோயில்களில் அன்னதானம் செய்வது அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் பரிகாரமாகும்.

மீனம்: முருகன் வழிபாடும் சிவன் வழிபாடும், மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை தரக்கூடியது. திருச்செந்தூர் சென்று தங்கி கடலில் நீராடி முருகனை வழிபாடு செய்வது அதிர்ஷ்டத்தை அளிக்கக்கூடிய அற்புதமான பரிகாரம்.

இவை எல்லாம் உங்கள் ராசிக்குரிய பொதுவான பரிகாரம் ஆகும்.உங்கள் ஜாதகப்படி உங்களுக்குரிய சரியான பரிகாரத்தை செய்வதன் மூலம் நீங்கள் வேண்டியதை பெறலாம்.

click me!