குழந்தை இல்லாதவர்களுக்குக் குறையற்ற வாழ்வு தரும் வனபத்ரகாளி! தொட்டில் கட்டி வேண்டினால் நடக்கும் அதிசயம்!

Published : Jan 27, 2026, 09:23 PM IST
Vana Bathrakali Amman for child birth Remedy in Tamil

சுருக்கம்

Vana Bathrakali Amman for child birth Remedy in Tamil : குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் இக்கோயிலுக்கு வந்து என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள, மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோயில் மேற்கரை வனபத்ரகாளியம்மன் கோயில் ஆகும். இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காளி அம்மனுக்கு உகந்த செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். அம்மன் வனத்தில் அருள்பாலிக்கின்றார். அதிசயமும் அற்புதம் நிறைந்த வன பத்திரகாளியம்மன் கோயிலில் முக்கியத்துவம் வரலாறு சிறப்பு அம்சங்கள் பலன்கள் ஆகியவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முருகனுக்கும் தெய்வானைக்கும் நிச்சயம் நடந்த தலம்; திருமணத் தடைகளை நீக்கும் திருவிடைக்கழி முருகனின் அருள்!

அம்மனின் வரலாறு: 

வன பத்திரகாளியம்மன் கோயில் பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்த இடத்தில் உருவானதாக கூறப்படுகிறது. மகிஷாசுரன் என்னும் அரக்கனை அழிக்க சிவபெருமானிடம் தவம் செய்ய இந்த வனப்பகுதிக்கு வனபத்ரகாளியம்மன் வந்ததாக கூறப்படுகிறது. இந்த வனத்தில் தான் அம்மன் தவம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் கோயில் சூனிய கடவுள்களான ஆரவல்லி, சுரவல்லி கதைகளுடன் தொடர்புடையது என்றும் நம்பப்படுகிறது. பாண்டவ சகோதரர்களில் ஒருவரான பீமன் அவர்களின் தீய செயல்களை முடிவுக்கு கொண்டுவர இங்கு வந்தார். அவர்களால் மயங்கி கிருஷ்ணரால் மீக்கப்பட்டார். தீய சகோதரர்களை விரட்ட கிருஷ்ணரால் ஒரு அல்லிமுத்துவை நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

அகத்தியருக்குத் திருமணக் காட்சி அளித்த நாகப்பட்டினம் திருஅகத்தியன்பள்ளி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில்!

வன பத்திரகாளியம்மிடம் பிரார்த்தனை செய்த பிறகு தான் அல்லிமுத்து தனது பணியை தொடங்கினார். அல்லிமுத்துவின் கர்ஜிக்கும் செயல்களை கண்டு ஆரவல்லியும் சூரவல்லியும் பயந்து நடுங்கி மிரண்டனர். அவர்கள் சரணடைந்து தங்கள் சகோதரியை அல்லி முத்துக்கு திருமணம் செய்து கொடுத்து உணவில் விஷம் வைத்துக் கொன்றனர். அர்ஜுனனின் மகன் அபிமன்யு மேல் உலகத்திற்கு சென்று அல்லி முத்துவை உயிருடன் பூமிக்கு கொண்டு வந்தான். இப்போது அல்லி முத்து இரட்டிப்பு வலிமை பெற்றவன். அதன் பிறகு வனபத்திர காளியம்மனை வேண்டிக்கொண்டு அவர் துணையுடன் ஆரவல்லி யையும் சூரவல்ளலியையும் கொன்றதாக கூறப்படுகிறது.

தமிழகத்திலேயே தங்கத்தேர் கொண்ட ஒரே ஒரு சிவன் கோயில்! ஓசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோயிலின் அபூர்வ சிறப்புகள்!

நேர்த்திக்கடன்: 

கணவன் உடல் மீது ஏதேனும் பிரச்சனையும் இருந்தாலும், நமக்கு ஏதேனும் ஒரு வேண்டுதல் இருந்தாலும் வன பத்திரகாளி அம்மன் கோயிலில் தன் தாலியை கழட்டி கோயிலில் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறேன் என்று பெண்கள் வேண்டிக் கொள்வார்களாம். அந்த செயல் நடந்தாலும் பிரச்சனையில் இருந்து விடு பெற்றாலும் பெண்கள் அம்மனுக்கு தாலியை கழட்டி உண்டியல் செலுத்தும் நேர்த்திக்கடன் இந்த கோயிலில் இருந்து வருகிறது. நம் முதல் முதலில் தொடங்கும் தொழிலுக்கு இக்கோயிலில் வந்து பூ போட்டு பார்க்கும் முறை இங்கு உள்ளது என்று கூறப்படுகிறது. சிகப்பு பூ மற்றும் வெள்ளைப்பூ இரண்டையும் பேப்பர்களில் மடித்து அந்த அம்மன் முன்னாடி போட்டு அதனை எடுத்துப் பார்த்தால் அம்மன் உத்தரவு கொடுப்பதாக கூறப்படுகிறது. 

நாம் நினைத்த தொழில் நிறைவு பெற்றால் அம்மனுக்கு புடவை சாத்துதல் எலுமிச்சம் மாலை சாத்துதல் போன்ற பழக்கமும் இங்கு இருந்து வருவதாக கூறப்படுகிறது. பகைவர்கள் நம் மீது ஏவப்பட்ட பில்லி சூனியம் எதனாலும் இக்கோவிலுக்கு வந்து சென்றால் விரைவில் அகலும் என்று கூறப்படுகிறது. குழந்தை வரம் வேண்டிய தம்பதியர்கள் இக்கோயிலுக்கு வந்து ஒரு சிகப்பு துணியில் ஒரு கல்லை வைத்து கட்டினால் விரைவில் குழந்தை பாக்கியம் அந்த அம்மனின் அருளால் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. நம் வேண்டுதல் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் ஆனால் நன்றி செலுத்துவதற்கு அம்மனின் முன் வந்தே நன்றி செலுத்த வேண்டும் என்று மிக முக்கியமாக கூறப்பட்டு வருகிறது.

எல்லா தோஷங்களும் நீங்க அருளும் ஸ்ரீ சூடேஸ்வரர் கோயில்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

எல்லா தோஷங்களும் நீங்க அருளும் ஸ்ரீ சூடேஸ்வரர் கோயில்!
தமிழகத்திலேயே தங்கத்தேர் கொண்ட ஒரே ஒரு சிவன் கோயில்! ஓசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோயிலின் அபூர்வ சிறப்புகள்!