நிதி நெருக்கடியை நீக்கும் மஞ்சள் வைத்தியம்- தெரிந்துகொள்ளுங்கள்..!!

By Dinesh TGFirst Published Dec 13, 2022, 8:10 PM IST
Highlights

மஞ்சளுக்கு வாஸ்து மற்றும் ஜோதிடத்திலும் முக்கியத்துவம் உண்டு. அதன்படி இரண்டு சாஸ்திரங்களிலும் மஞ்சளின் பயன்கள் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்களை குறித்து விரிவாக பார்க்கலாம்.
 

ஒருவருக்கு ஏற்படும் நிதி பற்றாக்குறையை நீக்குவதற்கு பல்வேறு பலன்கள் ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் மஞ்சளின் நற்பயணங்கள் நிதிச் சிக்கலுக்கு நல்லமுறையில் பலன் தரும் என இரண்டு சாஸ்திரங்களுமே கூறுகின்றன. குறிப்பிட்ட முறையில் மஞ்சளை பயன்படுத்துவதன் மூலம் வீட்டில் நிதிச் செழிப்பு ஏற்படுகிறது மற்றும் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை அமைகிறது. அதன்படி நிதிப் பற்றாக்குறை பிரச்னையில் மீளுவதற்கு மஞ்சளின் மகிமை குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

மஞ்சள் திலகம்

வீட்டின் வெளிப்புறச் சுவர்களில் மஞ்சளில் கோடு போட்டால், குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் எல்லாம் நீங்கும் என்கிற நம்பிக்கை பல்வேறு மக்களிடையே நிலவுகிறது. அதனால் பல வீடுகளின் நிலைப்படிகளில் மஞ்சளை வைத்து கோடுகளை போட்டு, நடுவில் குங்குமம் வைத்திருப்பார்கள். அதேபோல வீட்டின் முகப்பு கதவுக்கு மேலே, மஞ்சளை பெரிய வடிவில் வட்டமாக பூசியும் நடுவில் குங்குமம் வைப்பார்கள். இதன்மூலம் வீட்டின் பிரச்னைகள் தீருவதோடு மட்டுமின்றி, எந்தவிதமான எதிர்மறை ஆற்றலும் வீட்டுக்குள் நுழையாது என்று கூறப்படுகிறது.

மஞ்சள் வழிபாடு

நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபட ஐந்து மஞ்சள் கொம்புகள் கொண்ட ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் கட்டி வழிபட வேண்டும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஜாதகத்தில் உள்ள குரு தோஷத்தைப் போக்க மகாவிஷ்ணுவுக்கு மஞ்சள் கட்டியை சமர்பிப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், நம்பிக்கையின் படி, மஞ்சள் ஒரு நபரை பல தடைகளிலிருந்து விலக்கி, அதிர்ஷ்டத்தை தருகிறது.

கனவில் பல்லி வருவது அவ்வளவு நல்ல சகுனம் அல்ல..!!

மஞ்சள் சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் மகிழ்ச்சி மற்றும் அமைதிக்காக மஞ்சள் செடியை நடுவது மிகவும் நல்லது. இதனால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலவுவதுடன், குடும்ப உறுப்பினர்களின் உறவும் இனிமையாக இருக்கும். அதை சரியான நேரத்தில் சாகுபடி செய்து பயன்படுத்துவது உறவு மேம்பாட்டுக்கு வழிவகுக்கும்.

மஞ்சள் பொருள்

மஞ்சள், நாக குங்குமம், வெண்பூச்சி ஆகியவற்றை வெள்ளிப் பெட்டியில் வைத்து லட்சுமி கோயிலுக்குச் சென்று லட்சுமி தேவியின் பாதத்தைத் தொட்டு வணங்கி வரவேண்டும். அதை பணம் சேமிக்கும் பெட்டியில் எடுத்து வைக்க வேண்டும். சுக்ல பக்ஷத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் அதை எடுத்து பூஜை செய்ய வேண்டும். இந்த செயல்முறையால் பணம் மேலும் சேரும், விரயமாகாது.

click me!