திருமண வாழ்க்கை சிறப்புடன் அமைய உதவும் வாஸ்து டிப்ஸ்..!!

By Pani MonishaFirst Published Jan 19, 2023, 11:50 AM IST
Highlights

 திருமண வாழ்வை மேம்படுத்த உதவும் வாஸ்து குறிப்புகளை விரிவாக பார்க்கலாம்.

வாஸ்து என்பது கிரகங்கள் மற்றும் சுற்றுச்சூழலை குறித்து பண்டைய கால சாஸ்திரமாகும். இதில் மனிதர்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமையவும், அவர்களுக்கான உயர்வை வழங்கவும் பல்வேறு விதமான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. வாஸ்து என்பது வீடு கட்டுவதற்கும், வீட்டிலுள்ள பொருட்களை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதற்கு மட்டும் பயன்படுத்தப்படுவதாக பலரும் நம்புகின்றனர். அது முற்றிலும் தவறு. வாஸ்து சாஸ்திரத்தில் ஒட்டுமொத்த மனித வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு கருத்துகள் இடம்பெற்றுள்ளன. நீங்கள் வாஸ்து உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தி, உங்களுடைய திருமண உறவை கூட மேம்படுத்தலாம். இதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் போது, அது உறவில் இணக்கத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. உங்கள் துணையுடன் நல்ல பண்புகளை வளர்க்க உதவுகிறது. சிக்கல் இல்லாத திருமணத்திற்கு வழி வகுக்கிறது. அந்த வகையில் திருமண வாழ்வை மேம்படுத்த உதவும் வாஸ்து குறிப்புகளை விரிவாக பார்க்கலாம்.

நிறங்கள்

உங்களுடைய வீட்டின் வடகிழக்குப் பகுதியில் நீலம் அல்லது ஊதா நிறங்களில் வண்ணம் பூசுவது, திருமண வாழ்க்கையை மேம்படுத்த உதவும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இந்நிறங்களுக்கு காதல் உணர்வுகளை தூண்டும் சக்தி உள்ளது. அதனால் படுக்கை அறை அல்லது ஹாலில் இந்நிறங்களை நீங்களை பெயிண்டு செய்தால், உங்களுடைய துணைக்கு உங்கள் மீது அன்பும் காதலும் பன்மடங்கும் உயரும்.

விளக்குகள்

வீட்டுக்குள் விளக்குகள் எப்போதும் பளிச் சென்று இருக்கக் கூடாது. ஒருமாறி மங்கலாக இருந்தால் வீட்டுக்குள் ரம்மியமான சூழ்நிலை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் பளீர் என்று விளக்கு எரிவது கண்களுக்கும் உடலுக்கும் கெடுதல் தான். அதனால் வீட்டுக்குள் நன்றாக ஃபால்ஸ் சீலிங் அமைத்து விளக்குகளை எரிய விடுங்கள். இது வீட்டுக்குள் ஒரு அமைதியான நிலையை தரும். முடிந்தவரை வீடு கட்டும் போது அறைகளை சிறியதாக கட்டுங்கள். இது தம்பதிகளுக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும்.

இரும்பு கட்டில் வேண்டாம்

மரக்கட்டில்களுடன் ஒப்பிடும் போது இரும்புக் கட்டில்களின் விலை சற்று அதிகம் தான். ஆனால் தம்பதிகளின் நலனுக்கு மரக்கட்டில்கள் தான் சிறந்தது என்று வாஸ்து குறிப்பிடுகிறது. பொதுவாக இரும்புக் கட்டில்களில் படுத்தால், அது பல்வேறு சிக்கல்களை வழங்கும். இதனால் தம்பதிகளுக்கு அசவுகரியம் ஏற்படும். அதை தவிர்க்க மரக் கட்டில்களை வாங்கி படுத்துக்கொள்ளுங்கள். இதனால் தம்பதிகளுக்கிடையேயான உறவு சுமூகமாக இருக்கும். 

இதையும் படிங்க: வீடே அதிரும் குறட்டையில் இருந்து விடுபடனுமா? இப்படி 'டீ' போட்டு குடிச்சாலே போதும்

படுக்கறை திசை

உங்களுடைய படுக்கை அறை தென்மேற்கு திசையில் இருந்தால், அது தம்பதிகளுக்கிடையேயான காதலை அதிகரிக்கும் என்று . இதன்மூலம் ஆண்கள் எப்போதும் ஆற்றலுடன் இருப்பார்கள் என வாஸ்து குறிப்பிடுகிறது. அதேபோன்று சமையலறை எப்போதும் தென்கிழக்கு திசையில் தான் இருக்க வேண்டும். அப்போது தான் அடுப்படியில் உருவாகும் அக்னி, வீட்டுக்குள் ஆற்றலை தக்கவைத்திருக்கும். 


ஜோடி பொருட்கள் இருக்கட்டும்

உங்களுடைய வீட்டை அழகுப்படுத்த விரும்பினால், எப்போதும் ஜோடியான பொருட்களை வாங்கி வையுங்கள். ஒற்றையான பொருட்கள் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தலாம். ஏதேனும் தம்பதிகளாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தால், அதை படுக்கை அறையின் மேற்கு திசையில் மாட்டி வையுங்கள். தயவுசெய்து கடவுள் உருவங்களை படுக்கை அறையில் வைக்காதீர்கள். இது தம்பதிகளுக்கிடையே பிரச்னையை உருவாக்கும். அதேபோன்று படுக்கைக்கு நேராக கண்ணாடியை மாட்டிவைக்க வேண்டாம், இதன்காரணமாகவும் தம்பதிகளுக்கிடையில் சண்டை, சச்சரவுகள் தோன்றும். 

இதையும் படிங்க: பெண்களுக்கு அந்தரங்க உறுப்பில் வரும் நோய்த்தொற்று.. எந்த உணவுகள் காரணம் தெரியுமா?

click me!