பழநியில் பறந்தது முருகனின் வெற்றிக் கொடி! தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் - பக்தி பரவசத்தில் பக்தர்கள்!

Published : Jan 26, 2026, 10:18 PM IST
Palani Murugan Temple Thaipusam Kodiyetram Festival Flag Hoisting Spiritual

சுருக்கம்

Thaipusam Kodiyetram Festival Flag Hoisting Spiritual : பழநி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடைபெற்றது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடாக கருதப்படும் பழநி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அறுபடை வீடுகள் உட்பட அனைத்து முருகப் பெருமான் ஆலயங்களிலும் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்களுடன் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்படும் வைபவம் நடைபெற்று வருகிறது.

தமிழ் கடவுள் என்றாலே அது முருகன் தான் முருகனுக்கு தற்போது பக்தர்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றார்கள் என்றே கூறலாம். முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் ஆடி கிருத்திகை சஷ்டி விரதம் பக்தர்களால் தற்போது மிகுந்த உணர்வுடன் கடைப்பிடித்து வருகின்றன வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தைப்பூசம் வருகின்றது. மாத பெளர்ணமியும், பூசம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில்தான் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.

அன்று முருகன் கோயிலில் மிகச் சிறப்பாக இருக்கும். தைபூசத் திருவிழா முருகனுக்கு உகந்ததாக கூறப்படுகிறது. அறுபடை கோயிலிலும், மற்ற முருகன் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் ஒவ்வொரு கோயில் வாரியாக 10 நாட்களோ அல்லது 12 நாட்களோ இந்த தைப் பூச திருவிழா கொண்டாடப்படும். இந்த தைப்பூச திருவிழா முன்னிட்டு கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் பெரியநாயகி அம்மன் கோயில் நடை திறக்கப்பட்டு வள்ளி தெய்வானை சமேதரான உற்சவர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷெக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருள செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

இதில், வேல், மயில் மற்றும் சேவல் உருவம் பொறித்த கொடியானது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதே போன்று கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள வீதி உலா நடைபெறுகிறது. மேலும், வரும் 31ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

சாபம் நீக்கி மங்கல வாழ்வு தரும் திருவிடைக்கழி முருகன்! குரவ மரத்தடியில் தவம் செய்த குமரனின் வரலாறு!
முருகனுக்கும் தெய்வானைக்கும் நிச்சயம் நடந்த தலம்; திருமணத் தடைகளை நீக்கும் திருவிடைக்கழி முருகனின் அருள்!