Monday Astro Tips : உங்கள் எல்லா பிரச்சனைகளும் நொடியில் தீர இன்று 'இந்த' பரிகாரம் செய்யுங்கள்..!

By Kalai SelviFirst Published Apr 22, 2024, 9:51 AM IST
Highlights

திங்கட்கிழமை விரதம் இருந்து சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் இறைவன் மகிழ்ந்து உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.

இந்து நம்பிக்கையின்படி, ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்கட்கிழமை கடவுளின் கடவுளான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவனை வழிபடுவது கட்டாயம். அதாவது திங்கட்கிழமை அன்று செய்யப்படும் சிறப்பு பூஜை வழிபாடுகள் உங்கள் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கிவிடும் என்பது ஐதீகம். இன்று திங்கட்கிழமை என்பதால், நீங்கள் சில விதிப்படி சிவனை வழிபடுங்கள். மேலும், இந்த நாளில் மேற்கொள்ளப்படும் சில எளிய வழிமுறைகள் உங்களை எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுவிக்கும்.  

சிலர் சிவபெருமானை மகிழ்விக்க ஒவ்வொரு திங்கட்கிழமையும் விரதம் அனுசரிக்கிறார்கள். எனவே, திங்கட்கிழமை விரதம் இருந்து சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் இறைவன் மகிழ்ந்து உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். 

இதையும் படிங்க:  இன்று திங்கட்கிழமை : தவறுதலாக கூட இந்த பொருட்களை வாங்காதீர்கள்... அது அசுபமானது!

அதுபோல தொழில், வணிகம் அல்லது நிதி ஆகியவற்றில் சிரமப்பட்டால் திங்கட்கிழமை எடுக்கப்பட்ட சில சிறப்பு நடவடிக்கைகள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். எனவே, திங்கட்கிழமை செய்யப்படும் சில சிறப்பு பூஜை விதிகள் உங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் அதிர்ஷ்டத்தை எழுப்பி உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும். இந்த நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

இதையும் படிங்க: திங்கட்கிழமை 'இந்த' பரிகாரங்களை செய்தால் சிவன் அருள் கிடைக்கும்... வறுமை நீங்கும்..செழிப்பும் கிடைக்கும்!

திங்கள் அன்று சிவனை வழிபட எளிய வழிமுறைகள்:

  • ஒருவரது ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால் இப்படி செய்வது பலன் தரும். அதாவது, இன்று திங்கட்கிழமை என்பதால், ஒரு செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் சிறிது கருப்பு எள்ளைப் போடவும். அதன் பிறகு, 'ஓம் நம சிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்து, சிவலிங்கத்திற்கு நீரை வழங்குங்கள்.
  • உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு மோசமான நேரத்தைச் சந்திக்கிறீர்கள் என்றால், அதாவது நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் நீங்கள் தோல்வியடைந்தால், கவலைப்பட வேண்டாம், அதற்கு இந்த பரிகாரம் செய்யலாம். அதாவது, அரிசி மாவை சிறு உருண்டைகளாக செய்து மீன்களுக்கு கொடுக்கவும். இதனுடன் 'ஓம் நம சிவாய' என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் செய்யும் இந்த பரிகாரம் உங்களை அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுவிக்கும்.  
  • இது தவிர திங்கட்கிழமை சிவன் கோயிலுக்குச் சென்று சிவலிங்க ஜலாபிஷேகம் செய்து மாலையில் 11 நெய் தீபம் ஏற்றவும். இந்த பரிகாரத்தை செய்வதால் சிவபெருமான் உங்களது விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவார் என்பது ஐதீகம் மேலும், சிவலிங்கத்திற்கு நீரால் அர்ச்சனை செய்தால் நிதி வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
  • குழந்தை பாக்கியம் வேண்டி திங்கட்கிழமையன்று 11 சிவலிங்கங்களை மாவில் செய்து, அதை 11 முறை ஜலாபிஷேகம் செய்யுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் கருவுறுதலுக்கான தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!