புரிதல் இல்லாத கணவன் மனைவி பிரியாமல் இருக்க சொல்ல வேண்டிய மந்திரங்கள்!!

By Ma riyaFirst Published May 25, 2023, 6:26 PM IST
Highlights

மனைவியை புரிந்து கொள்ளாத கணவம், அவரை பிரியாமல் மீண்டும் அன்பில் இணைந்திருக்க சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்களை இங்கு காணலாம். 

கணவன் மனைவி உறவில் புரிதல் இருந்தால் தான் அந்த உறவு நீண்ட காலம் அவர்களை ஒன்றிணைத்து வைத்திருக்கும். புரிதல் இல்லாத உறவுகள் விரைவில் மனக்கசப்புகளால் அறுபடும். அந்த உறவில் இடைவெளி உண்டாகும். தம்பதிகளுக்குள் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாமல் போனாலும், சிறு சிறு விட்டுக்கொடுத்தல்கள் தவிர்க்கப்படும் போதும் தான் இடைவெளி உண்டாகிறது. இது மாதிரியான சூழ்நிலைகளில் வாழ்க்கை துணை பிரிந்து செல்லாமல் இருக்க என்னென்ன மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம். 

கணவன், மனைவிக்குள் சண்டைகள் ஏற்பட சில பூர்வ ஜென்ம பாவங்கள் கூட காரணமாக இருக்கலாம். ஜோதிட சாஸ்திரங்களின்படி உங்களுடைய முன் ஜென்ம பாவங்கள், புண்ணியங்கள் இந்த ஜென்மத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். சிலருக்கு மோசமான வாழ்க்கைத் துணை அமைவதற்கு பூர்வ ஜென்ம பாவமே காரணம் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த பாவங்களில் இருந்து விடுபட நாக மந்திரம் சொல்ல வேண்டும். இதனால் கணவன், மனைவிக்குள் புரிதல் ஏற்பட்டு நெருக்கம் உண்டாகும். 

சக்தி வாய்ந்த நாக மந்திரம்.."ஓம் சர்பராஜாய வித்மஹே, நாகராஜாய தீமஹி, தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்.."

மேலே சொல்லப்பட்டுள்ள நாகமந்திரத்தை சொன்னால் உங்கள் வாழ்க்கை துணைக்கும் உங்களுக்கும் இடையே இருக்கும் பிணக்குகள் தீரும். நாக தோஷம் இருப்பவர்களுக்கு வாழ்க்கைத் துணை சரியாக அமைந்திருக்க வாய்ப்புகள் குறைவு. கணவன் மனைவிக்குள் எப்போதும் பிரச்சனை இருக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கூட தள்ளி போயிருக்கலாம். நாக தோஷம் உள்ளவர்களுக்கு திருமண தடை கூட ஏற்படும். இப்படி நாக தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் நாக மந்திரத்தை நாள்தோறும் 108 முறை உச்சரிக்க வேண்டும். சாஸ்திரங்களின்படி நாகத்தை அடித்துக் கொன்றவர்கள், அதை துன்புறுத்தியவர்களுக்கு ஏழு ஜென்மத்திற்கும் அந்தப் பாவம் தொடரும். அதற்கான தண்டனையையும் அவர்கள் ஏழு ஜென்மங்கள் அனுபவிப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. 

இப்படி நாக தோஷ பாதிப்பில் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட நாக மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் குடும்ப வாழ்வில் நிம்மதி பிறப்பதற்கு நாகத்தை தொடர்ச்சியாக வழிபாடு செய்ய வேண்டும் கோயில்களில் வீற்றிருக்கும் நாகருக்கு மஞ்சள் காப்பு சாற்றி, குங்குமம் வைத்து பால் அபிஷேகம் செய்யலாம். நீங்கள் பாலாபிஷேகம் செய்யும்போது நாக மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். 

இதையும் படிங்க: தரித்தரம் நீங்கி வீட்டில் செல்வ வளம் பெருக! இந்த 1 பொருளை வீட்டில் வைத்தால் போதும்!!

கணவன் மனைவி பிரச்சனைகளை தீர்க்கும் கருடர் மந்திரம்!! 

"குங்கு மாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச, விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் பக்ஷிராஜாய நேநம" இந்த மந்திரத்தை நாக தோஷம் உள்ளவர்கள் சொன்னால் நாக தோஷம் நீங்கும் சிறப்புகள் கொண்டது. கருடாழ்வார் மந்திரங்களும் நாக மந்திரங்களைப் போலவே சிறப்பு வாய்ந்தது. கருடன் நாகத்திற்கு எதிரானவர் என்பதால் நாக தோஷம் நீங்கிவிடும் என்பது ஐதீகம். கருட மந்திரத்தை நாள்தோறும் 108 முறை உச்சரித்தால் நாக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இந்த இரண்டு மந்திரங்களையும் தொடர்ந்து சொல்லி வர கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி அவர்களது உறவு உறுதியாகும். 

இதையும் படிங்க: குலம் காக்கும் குலதெய்வம் யார் என்று தெரியாமல் கவலையா? இந்த 1 காரியம் செய்தால் உங்க குலதெய்வம் மனதில் தோன்றும்

click me!