மகா சிவராத்திரி 2024: செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத முக்கிய விஷயங்கள் இதோ..!

Published : Feb 23, 2024, 10:17 AM ISTUpdated : Feb 23, 2024, 05:41 PM IST
மகா சிவராத்திரி 2024: செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத முக்கிய விஷயங்கள் இதோ..!

சுருக்கம்

மகா சிவராத்திரி நெருங்கி வருவதால், இந்த நல்ல நாளைப் பயன்படுத்திக் கொள்ள செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் இங்கே..

சனாதன் தர்மத்தின் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியை முழு பக்தியுடன் கொண்டாடி, முறையான சடங்குகளுடன் சிவனை வழிபடுகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளுடன் தொடர்புடைய பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றுவது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் மங்களகரமானதாக இருக்கும்.

மகா சிவராத்திரியின் முக்கியத்துவம்: மகா சிவராத்திரி சிவபெருமானின் சிறந்த இரவு பிரபஞ்ச ஆற்றல்களுடன் இணைவதற்கும், இணக்கமான வாழ்க்கைக்கான ஆசீர்வாதங்களை பெறுவதற்கும் ஒரு நேரம் தியானம். சுய பரிசோதனை மற்றும் மனம் மற்றும் ஆன்மாவை தூய்மைப்படுத்துவது முதன்மை நோக்கம். இந்த தெய்வீக நிகழ்வை சரியான அறிவு மற்றும் நடைமுறைகளுடன் தழுவுவது அவசியம். எனவே, இப்பதிவில் இந்த நல்ல நாளே பயன்படுத்திக் கொள்ள செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படிங்க:  மகா சிவராத்திரி 2024: சிவனுக்கு பிடித்த ராசிகள் இவர்கள் தான்.. உங்க ராசி இருக்கா..?

மகா சிவராத்திரி அன்று செய்ய வேண்டியவை:

  • மகா சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விரதத்தை தொடங்க வேண்டும். உடல் மற்றும் மனதூய்மையைக்காக மூன்று வேளையும் குளித்து விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
  • உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உணவு ஏதும் உண்ணாமல் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதுவே, வயதானவர்கள் அல்லது உடல் நல கோளாறு உள்ளவர்கள் பால், பழம் மற்றும் உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
  • சிவபெருமானின் ஆசிர்வாதத்தை பெற அவரது கோவிலுக்கு செல்லுங்கள். தூய்மை மற்றும் பக்தியின் அடையாளங்களான வில்வ இலைகள் மற்றும் பால் வழங்குங்கள்.
  • தெய்வீக அதிர்வுகளுடன் எதிரொளிக்கவும் நேர்மறை ஆற்றல்களை "ஓம் நம சிவாய" போன்ற சிவ மந்திரங்களை ஓதவும்.
  • தேவைப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். கருணை மற்றும் தொண்டு செயல்கள் மகா சிவராத்திரி போது மிகவும் மதிக்கப்படுகின்றன.
  • மகா சிவராத்திரி நாளில் உண்ணாவிரதம் இருப்பது, சிவ மந்திரத்தை உச்சரிப்பது மட்டுமின்றி, கெட்ட எண்ணம் ஏதும் இல்லாமல் இருப்பதும் விரதத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

இதையும் படிங்க:  மகா சிவராத்திரி 2024: கேட்ட வரம் கிடைக்க ருத்ராபிஷேகம் சிவ பூஜை.. வீட்டில் எப்படி செய்வது தெரியுமா?

மகா சிவராத்திரி அன்று செய்யக்கூடாதவை:

  • பொறாமை மற்றும் பொய் போன்ற எதிர்மறையான கூறுகளில் இருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும்.
  • குறிப்பாக இந்நாளில் நீங்க எந்த பறவை அல்லது மிருகத்தையும் காயப்படுத்தினால் அது சிவபெருமானின் கோபத்தை உண்டாக்கும் என்பது நம்பிக்கை.
  • உங்கள் வீட்டில் அமைதியும், நல்லிணக்கத்தையும் பேணும் முயற்சிக்க வேண்டும். எந்த மோதல்களிலும் ஈடுபடக் கூடாது.
  • சிவலிங்கத்திற்கு நீர் வழங்குவதற்கு தாமிரத்தை தவிர, வேறு எந்த உலகத்தையும் நீங்கள் பயன்படுத்தக் கூடாது.
  • மகா சிவராத்திரி அன்று இறைச்சி, துரித உணவுகள், மது அருந்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
  • அதுபோல் இரவில் கண் விழிக்க வேண்டும் என்பதற்காக பகலில் தூங்கக் கூடாது. மேலும் சிவன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கொடுக்கும் அன்னதானத்தை வாங்கி சாப்பிடக் கூடாது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
click me!

Recommended Stories

Spiritual: நொடியில் ஓடி மறையும் கடன் தொல்லை.! கோடீஸ்வர யோகத்தை தரும் பரிகாரங்கள்.!
Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!