ISKCON : கோலாகலமாய் நடந்து முடிந்த இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை!

Published : May 02, 2024, 08:22 PM ISTUpdated : May 03, 2024, 12:03 PM IST
ISKCON : கோலாகலமாய் நடந்து முடிந்த இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை!

சுருக்கம்

இஸ்கான் வடசென்னை தனது 3வது ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ கவுர நிதாய் ரத யாத்திரை விழாவை நேற்றைய தினம் அன்று திருநின்றவூரில் கொண்டாடியது.

இஸ்கான் என்று அழைக்கப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், சர்வதேச அளவில் பரவி உள்ளது. இந்த இயக்கம் குறித்து இந்தியாவில் சிலருக்கு தெரியாமல் இருந்தாலும், "ஹரே கிருஷ்ணா ஹரே ராமா" என்ற இஸ்கான் அமைப்பின் முழக்கத்தை நீங்கள் கேட்டு இருப்பீர்கள்.

இந்நிலையில், இந்த அமைப்பு சார்பில் நேற்று (மே 01) புதன்கிழமை அன்று வட சென்னை 3வது வருடாந்திர ரத யாத்திரை திருநின்றவூரில் நடைபெற்றது. கிருஷ்ணரின் நாமத்தையும், புகழையும் பரப்பும் நோக்கில் இஸ்கானின், 'ஸ்ரீ கௌர நிதாய் ரத யாத்திரை' நேற்று மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. மகிழ்ச்சியை விரும்பும் அனைத்து மக்களுக்கும் இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சர்வே பவந்து சுகினா அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

இதையும் படிங்க: இஸ்கான் இலவச ஆன்லைன் 'கீதா மகாத்ம்யம்' படிப்பு.. எப்போ தெரியுமா..?

சைதன்ய பகவான் “ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே - ஹரே ராம ஹரே ராம ராம ராம ராம ஹரே ஹரே" என்ற புனித நாமத்தை பரப்பினார். இதன் மூலம் இந்தியா முழுவதும் மகிழ்ச்சியில் மூழ்கியது. ஸ்ரீல பிரபுபாதர் அதை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்றார். இந்த மந்திரத்தை தனது ஆதரவாளர்களை தெருக்களில் ஜபிக்கவும் நடனமாடவும் செய்ததன் மூலம் அவர் இந்த மந்திரத்தை பிரபலமாக்கினார். 

இதையும் படிங்க:  ISKCON : வட-சென்னை.. கோலாகலமாக நடைபெற்ற 10வது வருட ஸ்ரீ ஸ்ரீ கௌர நிதாய் ரத யாத்தினர விழா!

ஸ்ரீல பிரபுபாதர் இந்த ரத யாத்திரையை 1967 இல் சான்பிரான்சிஸ்கோவில் தொடங்கினார். இப்போது திருநின்றவூர் உட்பட உலகம் முழுவதும் 192 நாடுகளில் நடக்கிறது. எல்லா மக்களையும் மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கமும் ஒன்றுதான்.

இந்த ரதத்தில் ஹைட்ராலிக் விதானம் உள்ளது. விதானம் 11.5 அடி உயரம் விரிவடைகிறது. ரதத்தின் மொத்த உயரம் தரையிலிருந்து 12 அடி விதானம் முழுவதுமாக திறக்கும் போது, மேலே உள்ள கலசமும் கொடியும், மொத்த உயரம் 25 அடி ஆகும். இந்தப் புதிய ரதம் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மாலை 4 மணியளவில் வரவேற்பு உரை தொடங்கியது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!