"இந்த' அறிகுறிகள் நடக்குதா? லட்சுமி தேவி விரைவில் உங்கள் வீட்டிற்கு வருவாள் என்று அர்த்தம்..!!

Published : Sep 29, 2023, 09:44 AM ISTUpdated : Sep 29, 2023, 09:48 AM IST
"இந்த' அறிகுறிகள் நடக்குதா? லட்சுமி தேவி விரைவில் உங்கள் வீட்டிற்கு வருவாள் என்று அர்த்தம்..!!

சுருக்கம்

உங்கள் வீட்டிற்கு லக்ஷ்மி தேவி வருவதற்கு முன் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..

இந்து மதத்தில் லட்சுமி தேவிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. லட்சுமி தேவி செல்வத்தின் உருவமாக. லட்சுமி தேவியால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நபரின் வாழ்க்கையில் இருந்து அனைத்து நிதி சிக்கல்களும் நீங்கும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், ஜோதிடத்தின்படி, ஒருவருக்கு சில அறிகுறிகள் தென்பட்டால் அல்லது உணர்ந்தால், அவர்களின் வாழ்க்கையில் நல்ல நாட்கள் தொடங்கப் போகிறது என்று அர்த்தம். ஜோதிடர்களும் இதையே சொல்கிறார்கள். மேலும் லக்ஷ்மி தேவி வருவதற்கு முன் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்படும் என்பதை தெரிந்து கொள்வோம்..

இப்படி கனவுகள் வரும்:
ஜோதிடத்தின் படி, நல்ல நாட்கள் தொடங்கும் முன் ஒருவருக்கு நல்ல கனவுகள் வரும். கனவில் கடவுளைக் காண்பது, பொக்கிஷத்தைக் காண்பது, மரங்கள், செடிகள் மற்றும் பசுமையைப் பார்ப்பது. உங்கள் கனவில் இவற்றைக் கண்டால், அது உங்கள் வாழ்வில் நல்ல நாட்கள் தொடங்கும் என்பதற்கான அடையாளம் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

பச்சை மரங்கள்:
நல்ல நாட்கள் வருவதற்குள் உங்கள் வீட்டில் மரங்களும் செடிகளும் பசுமையாக வளரும். குறிப்பாக துளசி செடி பச்சையாகவும் அழகாகவும் தெரிகிறது. அதேபோல வீட்டில் உள்ள வாழை மரங்கள், பணச் செடிகளும் பசுமையாக மாறும். இந்த அறிகுறியும் செழிப்பின் அடையாளம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: Vastu Tips : லட்சுமி தேவி உங்கள் வீட்டில் தங்க..இந்த 5 அசுப காரியங்களை இன்றே வீட்டிலிருந்து தூக்கி எறியுங்கள்

நல்லதே நடக்கும்:
உங்கள் வாழ்வில் நல்ல நாட்கள் வரும் முன், வீட்டில் இனிமையான சூழல் உருவாகும். வானிலை நேர்மறையாக மாறத் தொடங்குகிறது. ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ அது உண்மையாக மாறத் தொடங்குகிறது. மேலும் நேர்மறை ஆற்றலும் மனிதனில் பாய்கிறது.

இதையும் படிங்க:  என்ன வியாழக்கிழமை தலைக்கு குளிச்சா லட்சுமி தேவிக்கு கோபம் வருமா? உண்மை என்னனு தெரிஞ்சுக்கலாம் வாங்க..!!

இவை தோன்ற ஆரம்பிக்கின்றன:
ஒரு நபர் தனது வீட்டில் கருப்பு எறும்புகளின் கூட்டத்தைக் கண்டால் அது ஒரு நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது மற்றும் காலையில் சங்கு சத்தம் கேட்கிறது. இவற்றை நீங்கள் கண்டால், லட்சுமி தேவி உங்கள் மீது மகிழ்ச்சியடைந்து உங்கள் மீது கருணை காட்டுவதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். மேலும், லட்சுமி தேவி விரைவில் உங்கள் வீட்டிற்கு வருவாள் என்பது ஐதீகம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: நொடியில் ஓடி மறையும் கடன் தொல்லை.! கோடீஸ்வர யோகத்தை தரும் பரிகாரங்கள்.!
Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!