ராகு: யாருக்கு, எப்போது கோடிகளை அள்ளிக் கொடுப்பார் தெரியுமா...?!

Published : Jun 21, 2025, 09:48 AM IST
rahu

சுருக்கம்

ராகு-கேதுவின் அமைப்பு ஒருவரின் நிலையை தீர்மானிக்கும். ராகுவின் உரிய நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவை ஒளி, ஆன்மிகம், யோக சக்தி நிறைந்தவை. ராகு திசையில் அரசியல் வெற்றி, பணவரவு, புகழ் போன்றவை நிகழும்.

ராகு-கேது ஆகிய கிரங்களின் அமைப்பே ஒருவரின் நிலையை தீர்மானிக்கும் என்ற நம்பிக்கை ஜோதிடத்தில் உண்டு.ஜாதக அமைப்பில் நீதிமான் சனி கிரகத்தைவிட ராகு-கேதுவின் ஆற்றல் அதிகமாகவே இருக்கும் எனவும் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தி நிழல் கிரகங்களான ராகு-கேது உண்டு எனவும் ஜோதிட வல்லுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜோதிட உலகில் வக்ர சஞ்சாரி என அழைக்கப்படும் ராகு, இருளான இடத்தில் ஒளியை விதைக்கக் கூடிய அதிசய சக்தி வாய்ந்த கிரகம். சர்ப்பக் கிரகங்களில் ஒருவராகக் கருதப்படும் ராகு, 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்பவர். இவரது நிலை ஒரு ஜாதகத்தில் உயரமாக அமையும்போது, ஏழை ஒருவர் கோடீஸ்வரராக மாறுவதும், புகழில் வளர்வதும் நிகழும்.

நட்சத்திரங்களில் ஒளியும் ஆன்மிகமும்

ராகுவின் உரிய நட்சத்திரங்கள் – திருவாதிரை, சுவாதி, சதயம். இந்த மூன்றும் ஒளி, ஆன்மிகம், யோக சக்தி நிறைந்தவை. திருவாதிரை என்பது சிவபெருமானின் ஜோதி வடிவத்துடன் பிணைந்தது. சுவாதி, துலா ராசியில் அமைந்த மகாலட்சுமியின் நட்சத்திரம். சதயம், சனியின் கும்ப ராசியில் உள்ளதால், பகுத்தறிவு, மக்கள் மேலாண்மை, அரசியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்க முடியும். இந்நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் புத்திசாலிகள், ஆன்மிகத்தில் ஆழ்ந்தவர்கள், ஜீவனில் உயர்வுகளை அடைவோர். ராகு கிரகத்தின் ஆதிக்கம் நிறை்நத திருவாதிரை, சுவாதி மற்றும் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதி புத்திசாலிகளாகவும், கடவுள் பக்தியில் அதிக நாட்டம் உள்ளவர்களாகவும், மனோதிடம், உதவும் குணம் ஆகியவற்றை பெற்றவர்களாகவும் இருப்பர்.

ராகு தரும் யோக பலங்கள்

பெரும்பாலான ஜாதகங்களில், யோககரனாகவே செயல்படுகிறார் ராகு என சொல்லும் ஜோதிட நூல்கள், ராகு சில நேரங்களில், விபரீத ராஜயோகம், நீசபங்க ராஜயோகம், சதுர் கேந்திர யோகம் போன்ற பெரும் யோகங்களை உருவாக்குகிறான் என கூறுகின்றனர். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் போன்ற நட்புராசிகளில் ராகு அமர்ந்தால் மிகுந்த பலன் தருவார். ராகு திசை நேரத்தில் அரசியல் வெற்றி, பண செல்வம், புகழ், வெளிநாட்டு வாழ்க்கை, தொழில் வளர்ச்சி போன்றவை நிகழும்.

காலசர்ப்ப யோகம் – யோகமா, தோஷம்?

எல்லா கிரகங்களும் ராகு – கேதுவுக்குள் அமையும்போது, காலசர்ப்ப யோகம் ஏற்படுகிறது. இது சிலருக்கு மிகப்பெரிய யோகமாகவும், மற்றவர்களுக்கு தோஷமாகவும் செயல்படக்கூடியது. ரிஷபம், துலாம், கன்னி, கும்பம், மகரம் போன்ற லக்னங்களில் அமையும்போது, ராகு இந்த யோகத்தை நன்மையாக மாற்றுவான். அப்போது தொட்டதெல்லாம் துலங்கும், செய்யும காரிங்கள் எல்லாம் வெறறி அடையும்.

ராகு திசையின் பலன்கள்

  • குழந்தைப் பருவத்தில் ராகு திசை அமைந்தால், நல்ல உடல்நலம், புத்திசாலித்தனம், சுறுசுறுப்பு ஆகியவை கிடைக்கும்.
  • இளமை பருவத்தில் கல்வியில் மேன்மை, போட்டித் தேர்வுகளில் வெற்றி, புத்திச் செம்மை.
  • நடுத்தர வயதில் எதிர்பாராத பண வரவு, புதிய வாய்ப்புகள், வாழ்க்கை முன்னேற்றம்.
  • முதுமை பருவத்தில் வசதி வாய்ப்பு, நிலைத்த வாழ்க்கை, பிழைபாடின்றி செலவழிக்கக் கூடிய தன்மை.

ராகுவை வணங்கும் முறை

ராகுவை வணங்குவதன் மூலம் அவரது பாபத் தாக்கங்களை சமன்செய்து, நன்மைகளை பெருக்க முடியும். “ஓம் ராம் ராவே நமஹ” என்ற பீஜ மந்திரத்தை தினசரி 108 முறை ஜபிக்கலாம். திருவாதிரை, சுவாதி, சதயம் நாட்களில் விரதம் இருந்து, ராகு காலத்தில் வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். நீல நிற உடைகள் அணிவது, நீல அல்லது கருப்பு தானங்கள் செய்வது, பசு நெய் தீபம் ஏற்றுவது போன்றவை பரிகாரமாக அமையும்.

ராகு பரிகாரத்திற்கான சிறப்பு கோவில்கள்

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு பரிகார ஸ்தலம் இருப்பது போல, ராகுவுக்குரிய முக்கியமான பரிகாரத் தலமாகக் கருதப்படுவது கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில். இங்கு ராகுவுக்கென தனிச் சந்நிதி அமைந்துள்ளது. மேலும், திருச்சிராப்பள்ளி அருகே உள்ள சித்தார்த்த சுவாமி கோவில், திருவையாறு அருகே அலங்குடி அபத்சகாயேஸ்வரர் கோவில், கோயம்புத்தூர் அருகே சுக்ரதீஸ்வரர் கோவில் போன்றவை ராகு–கேது தோஷ நிவாரணத்திற்குப் பிரசித்தி பெற்றவை. இங்கு நாகபூசை, அபிஷேகம், ஹோமங்கள், நிவேதனங்கள் என பல பரிகாரங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இருளில் ஒளி கொடுக்கும் ராகு

ராகு, தோற்றத்தில் பாப கிரகமாக இருந்தாலும், ஒரு மனிதனின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தும் விசித்திர சக்தி கொண்டவர். அவரை வணங்கும் நம்பிக்கையுடன், சரியான பரிகாரங்கள் மேற்கொண்டால், ராகு திசை என்பது ஒரு பேராசீர்வாதமாக மாறும். உயர்வு தரும் வல்லமையை அவர் பெற்றுள்ளதால், அவரின் அருளால் சாதாரண மக்களும் கோடீஸ்வரராக மாறுவார்கள் என்றால் மிகையல்ல.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!