'இந்த' மோதிரங்களை அணிந்தால் உங்களுக்கு பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கும்!

Published : Apr 13, 2024, 10:25 AM ISTUpdated : Apr 13, 2024, 10:33 AM IST
'இந்த' மோதிரங்களை அணிந்தால் உங்களுக்கு பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கும்!

சுருக்கம்

ஜோதிட சாஸ்திரங்கள் படி, இந்த 6 மோதிரங்களை அணிவதன் மூலம் பண பலன்களை நீங்கள் பெறுவீர்கள்.. 

பொதுவாகவே, இந்து மதத்தில் ஜோதிடத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு.. எந்த ஒரு சுப காரியம் தொடங்கினாலும் அதைப் ஜோதிட சாஸ்திரப்படி தான் தொடங்குவது இந்து மக்களின் வழக்கம். அதுமட்டுமின்றி, இவர்கள் ஆடைகள் மற்றும் நகைகளை கூட ஜோதிட சாஸ்திரப்படி அணிவார்கள்.

அதுபோல, எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதையும், எதிர்காலத்தில் ஏதேனும் தவறு நடக்கப் போகிறது என்றால் அதையும் ஜோதிடத்தில் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உள்ளது. அவற்றில் ஒன்று தான் மோதிரங்கள். ஜோதிடத்தில் பல வகையான மோதிரங்கள் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக பணத்தின் அடிப்படையில் பலன்கள் பெற விரும்பினால், ஜோதிட சாஸ்திரப்படி சில மோதிரங்கள் அற்புதமான பலன்களை வழங்குகிறது.

ஆமை மோதிரம்: ஜோதிடம் படி, ஆமை மோதிரம் உங்கள் தோற்றத்தை நாகரீகமாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கையில் உள்ள குறைபாடுகளையும் போக்கும். தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இந்த மோதிரத்தை அணிவது நல்லது. இதன் மூலம் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இந்த மோதிரம் அணிந்தால், பண பலன்களும் கிடைக்கும். 

பாம்பு மோதிரம்: இந்து மதத்தில் பாம்பு மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. சிவபெருமான் தன் கழுத்தில் பாம்புக்கு இடம் கொடுத்துள்ளார். நாக பஞ்சமி அன்று இந்து மதத்தை சேர்ந்தவர்கள் பாம்புகளை வணங்குவது வழக்கம். எனவே, பாம்பு மோதிரம் மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. உங்கள் ஜாதகத்தில் சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம் மற்றும் கிரகண தோஷம் இருந்தால், நீங்கள் பாம்பு வடிவ மோதிரத்தை அணியலாம். மேலும், நீங்கள் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால், பாம்பு வடிவ மோதிரத்தை அணிய வேண்டும். அது உங்கள் செல்வத்தையும் பெருக்கும். 

இதையும் படிங்க:  திருமணத்திற்குப் பிறகு பெண்கள் ஏன் காலில் மெட்டி அணிகிறார்கள்? அறிவியல் காரணம் தெரிஞ்சா அதிர்ந்து போவீர்கள்..!

செப்பு மோதிரம்: இந்த மோதிரம் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி மற்ற விஷயங்களிலும் இதன் மூலம் பலன்களை பெறலாம். ஜோதிட சாஸ்திரப்படி உங்கள் ஜாதகத்தில் செப்பு மோதிரம் அணிந்தால் சூரிய தோஷம் நீங்கும். மேலும், இந்த மோதிரத்தை அணிந்தால் சமூகத்தில் மதிப்பு கூடும் மற்றும் தைரியம் அதிகரிக்கும். 

நவக்கிரக மோதிரம்: உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் வேண்டுமானால் நவகிரக மோதிரத்தை அணியுங்கள். இந்த மோதிரத்தை அணிந்தவுடன் உங்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். அதுமட்டுமின்றி, இதை அணிவதால் மன உளைச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 

இதையும் படிங்க:  ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள் இந்த ரத்தினக்கல்லை அணிந்தால் போதும்.. உங்க காட்டில் பண மழை தான்..

குதிரைவாலி மோதிரம்: இந்த மோதிரம் மிகவும் மங்களகரமானது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். கருப்பு குதிரைவாலியால் செய்யப்பட்ட மோதிரத்தை அணிந்தால், சனி பகவானின் கோபத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். மேலும், உங்கள் ஜாதகத்தில் சனியின் சதே சதி நடந்து கொண்டிருந்தால் குதிரைக் காலால் செய்யப்பட்ட மோதிரத்தை உடனே அணியுங்கள். இது உங்கள் பிரச்சனைகளை குறைக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது.

யானை மோதிரம்: இந்து மதத்திலும் யானை மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும் இது விநாயகப் பெருமானின் அவதாரங்கள் என்று கூறப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த மோதிரத்தை அணிவதன் மூலம், நீங்கள் எதிர்கொள்ளும் எந்த நிதி நெருக்கடியும் தவிர்க்கப்படும். உங்களுக்கு தெரியுமா.. செல்வத்தின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் குபேரரை மகிழ்விக்க யானை மோதிரங்களும் அணிவதாக நம்பப்படுகிறது என்று புராணங்கள் கூறுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!
Secret Ring: எதிரிகளை விரட்டி அடிக்கும் ரகசிய மோதிரம்.! இதனை கைகளில் அணிந்தால் கடன்களும் காணாமல் போகுமாம்.!