திமுக ஆட்சியில் எந்த மதத்தினருக்கு முன்னுரிமை கொடுப்பார் மு.க.ஸ்டாலின்..? அமைச்சர் சேகர்பாபுவின் நச் பதில்..!

Published : Aug 05, 2021, 06:03 PM IST
திமுக ஆட்சியில் எந்த மதத்தினருக்கு முன்னுரிமை கொடுப்பார் மு.க.ஸ்டாலின்..? அமைச்சர் சேகர்பாபுவின் நச் பதில்..!

சுருக்கம்

தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர்கள் மற்றும் எண்களின் பதாகைகள் கோயிலில் வைக்கப்படும். 539 கோவில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் விரிவுபடுத்தப்படும்

குடமுழுக்கின் போது விருப்பத்தின் பேரில் ஆகம விதிகளின் படி தமிழ் மொழியிலும் அர்ச்சனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் 'அன்னை தமிழில் அர்ச்சனை' திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ‘’பெரும்பான்மை மக்களின் விருப்பம் எதுவோ, அப்படியே அரசு செயல்படும். அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றுவதே அரசின் கடமை. சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமல், எந்த மதத்தினரின் மனமும் புண்படாமல் முதலமைச்சர் முடிவெடுப்பார்.

தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர்கள் மற்றும் எண்களின் பதாகைகள் கோயிலில் வைக்கப்படும். 539 கோவில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் விரிவுபடுத்தப்படும்’’ என அவர் தெரிவித்தார்.  
 

PREV
click me!

Recommended Stories

Cockroach Janta Party : ஒரு தலைமுறையின் கோபத்திற்கு 'கரப்பான் பூச்சி' என்று பெயர்!
Ration Card Update: ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா? இந்த வேலையை உடனே முடியுங்க... இல்லைனா பொருட்கள் கிடைக்காது!