அரைகம்பத்தில் அதிமுக கொடி .. கட்சி நிகழ்ச்சிகள் ரத்து. ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Aug 5, 2021, 5:36 PM IST
Highlights

கழக அவைத் தலைவர் அண்ணன் திரு மதுசூதனன் அவர்களின் மறைவையொட்டி 5-8-2021 முதல் 7-8-2021 வரை மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும், அதேபோல தமிழ்நாடு மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும், கழக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் 

மதுசூதனன் மறைவையொட்டி வரும் 7ஆம் தேதி வரை 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் காலமானார். அவருக்கு வயது (81) உடல்நல குறைவு காரணமாகவும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார் அவர் உயிரிழந்திருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தங்களது ஆழ்ந்த இரங்களை உருக்கமாக தெரிவித்துள்ளனர். மேலும் மதுசூதனன் மறைவையொட்டி, 7 ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. 

ஏறத்தாழ 70 ஆண்டுகள் புரட்சித்தலைவரின் புகழ் பாடி, கழக வளர்ச்சிக்காக பாடுபட்டு வாழ்நாளெல்லாம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் விசுவாச தொண்டராக வாழ்ந்து, மறைந்த அண்ணன் மதுசூதனன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உற்றார் உறவினர்களுக்கும், இந்த துயரத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும், ஒன்றரை கோடி கழகத்தின்ரின் சார்பிலும், எங்கள் சார்பிலும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். 

கழக அவைத் தலைவர் அண்ணன் திரு மதுசூதனன் அவர்களின் மறைவையொட்டி 5-8-2021 முதல் 7-8-2021 வரை மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும், அதேபோல தமிழ்நாடு மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும், கழக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதையும், அனைத்து கழக நிகழ்ச்சிகளும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

click me!