எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம்....அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு" பொங்கி எழும் கமல்.!

By T BalamurukanFirst Published May 17, 2020, 6:01 PM IST
Highlights

மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு" என பதிவிட்டுள்ளார்.

டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசு மீது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தொடர்ந்து குற்றம் குற்றம்சாட்டி வருகிறார்.டாஸ்மாக் திறந்த தமிழக அரசுக்கு தாய்குலம் சரியான தீர்ப்பை வழங்கும் காலம் வெகுவிரைவில் காத்திருக்கிறது என்று கருத்து தெரிவித்திருந்தார் கமல்.

இந்நிலையில் கமல் ஹாசன் தனது டுவிட் பக்கத்தில் "20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு?. மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு" என பதிவிட்டுள்ளார்.

click me!