வழிவிடுமா கொரோனா..? தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?- அமைச்சர் செங்கோட்டையன் பதில்

By Thiraviaraj RMFirst Published Jun 27, 2020, 5:55 PM IST
Highlights

கொரோனா பாதிப்பால் மூடப்பட்டுள்ள தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் மூடப்பட்டுள்ள தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’ தமிழகத்தில் தற்போதைய நிலையில் சூழலில் பள்ளிகள் திறப்பது என்பது சாத்தியமில்லை. பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஆன்லைன் வகுப்புகளை பொறுத்தவரை 2 நாட்களுக்குள் முதலமைச்சருடன் பேசி முடிவு செய்யப்படும்’’என அவர் தெரிவித்துள்ளார். 

click me!