7 தமிழர்கள் விடுதலையை எதிர்க்கும் தமிழக காங்கிரஸ்... திமுகவின் நிலைப்பாடு என்ன..? டாக்டர் ராமதாஸ் கிடுக்கிப்பிடி!

By Asianet TamilFirst Published Oct 15, 2019, 7:01 AM IST
Highlights

பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வர் பியாந்த்சிங்கை படுகொலை செய்த பயங்கரவாதியை விடுதலை செய்ய தற்போதைய காங்கிரஸ் முதல்வரே பரிந்துரை செய்கிறார். மத்திய அரசும் அதை ஏற்கிறது. இன உணர்வு என்றால் என்ன என்பதை பஞ்சாப் காங்கிரசிடம்  தமிழக காங்கிரஸ் கற்க வேண்டும்!  

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலையை காங்கிரஸ் எதிர்க்கிறது. காங்கிரஸின் நிலைப்பாட்டை திமுக ஏற்கிறதா என்பதை அக்கட்சியின் தலைமை விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலையில் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது பேசுபொருள் ஆகியிருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் சர்ச்சையாகப் பேசிய சீமானுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். ராஜீவ் கொலையை சர்ச்சையாகப் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜீவ் கொலையில் தண்டனை பெற்ற 7 தமிழர்கள் பற்றி டாக்டர் ராமதாஸ் 3 ட்வீட்களை போட்டிருக்கிறார். அதில், “ராஜிவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களும் இரு மடங்கு தண்டனையை அனுபவித்து விட்டனர். அவர்களை தமிழக அரசு விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றமும் கூறிவிட்டது. இதன்பிறகும் அவர்களை விடுதலையைத் தமிழக காங்கிரஸ் எதிர்க்கிறது என்றால், அவர்களின் மனித நேயம் போற்றத்தக்கது!


பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வர் பியாந்த்சிங்கை படுகொலை செய்த பயங்கரவாதியை விடுதலை செய்ய தற்போதைய காங்கிரஸ் முதல்வரே பரிந்துரை செய்கிறார். மத்திய அரசும் அதை ஏற்கிறது. இன உணர்வு என்றால் என்ன என்பதை பஞ்சாப் காங்கிரசிடம்  தமிழக காங்கிரஸ் கற்க வேண்டும்!  பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலையை தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. கூட்டணி கட்சியான காங்கிரசின் இந்த நிலைப்பாட்டை திமுக ஏற்கிறதா என்பதை அக்கட்சியின் தலைமை விளக்க வேண்டும்!” என டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!