கம்யூனிஸ்டுகளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.. கடைசி நேரத்தில் கழுத்தறுக்கும் திமுக.

Published : Mar 02, 2021, 03:32 PM ISTUpdated : Mar 02, 2021, 04:53 PM IST
கம்யூனிஸ்டுகளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.. கடைசி நேரத்தில் கழுத்தறுக்கும் திமுக.

சுருக்கம்

திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.  ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்திற்க்கு சட்டமன்ற தேர்தக் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களின் கூட்டணி தொகுதி உடன்பாடுகளை இறுதி செய்ய வேகம் காட்ட துவங்கியுள்ளனர்.

திமுக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான  தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.  ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்திற்க்கு சட்டமன்ற தேர்தக் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களின் கூட்டணி தொகுதி உடன்பாடுகளை இறுதி செய்ய வேகம் காட்ட துவங்கியுள்ளனர்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு முதற்கட்ட பேச்சுவார் த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.இதில் திமுக சார்பில் தொகுதி பங்கீட்டு குழுவின் தலைவர் டி.ஆர் பாலு தலைமையில் முதன்மை செயலாளர்  கே. என் நேரு துணை பொதுச்செயலாளர்கள், ஐ. பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆர்.எஸ் பாரதி மற்றும் எ.வ.வேலுவும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் சம்பத், சௌந்தரராஜன் உள்ளிட்டோர் 30 நிமிடம்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 தொகுதிகள் கேட்டதாக தகவல் தெரிகிறது. ஆனால் திமுக தரப்பில் 5 முதல் 7 தொகுதிகள் மட்டுமே வழங்கபடும் என கூறியதால் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டபடாமல் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பின்னர், அதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர்கள் கே.சுப்புராயன் எம்.பி செய்தியாளர்  சந்தித்தார். திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. மீண்டும் நாளை இரண்டாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.விரைவில் பேச்சுவார்த்தையில் முடிவு  எட்டப்படும் என்று நம்புகிறோம். 

 

எங்களுடைய டிமாண்ட் -டை நாங்கள் தெரிவித்து விட்டோம். எத்தனை தொகுதி கேட்டு இருக்கிறோம் என்று பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படுத்தும் நிலை இன்னும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

PREV
click me!

Recommended Stories

TN Politics: இந்தியா கூட்டணி கூட்டத்தை கைகழுவிய திமுக! அறிவாலயம் முடிவுக்கு பின்னணியில் கமலாலயம்? பரபரப்பு தகவல்!
TVK vs DMK: புறக்கணித்த மேயர்... புறந்தள்ளிய எம்.எல்.ஏ! அரசு விழாவில் அரங்கேறிய பனிப்போர்! சென்னையில் அரங்கேறும் ‘ஈகோ’ யுத்தம்!