தமிழக மக்களுக்கு எச்சரிக்கை..!! இந்த 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பிய்த்து உதறப் போகிறது..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2020, 1:06 PM IST
Highlights

கடந்த 24 மணி நேரத்தில் கொடநாடு (நீலகிரி) 1 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அக்டோபர் 9 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், 

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அதேபோல் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் அக்டோபர் 9-ஆம் தேதி அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் உருவாகக்கூடும், அதனை அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுபெறக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி  செல்சியஸ்சும், குறைந்தபட்ச வெப்பநிலை  27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாக கூடும்.கடந்த 24 மணி நேரத்தில் கொடநாடு (நீலகிரி) 1 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

அக்டோபர் 9 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், அக்டோபர் 10 அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு மற்றும் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் 8 ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!