அது நடக்கணும்னா அதிமுக கூட்டணிக்கு ஓட்டு போடுங்க..! விஜயகாந்த் அதிரடி..!

By Manikandan S R SFirst Published Dec 27, 2019, 8:12 AM IST
Highlights

கிராமங்கள் வளர்ச்சி பெற அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இன்று மற்றும் 30 ம் தேதி ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஆளும் அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக உட்பட பல கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ்,மதிமுக,விசிக,கம்யூனிஸ்ட்கள், முஸ்லீம் லீக் போன்றவை இருக்கின்றன. இந்தநிலையில் அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 27  மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்த தேர்தலில் கூட்டணியுடனும், தனித்தும் போட்டியிடுகின்றது. தே.மு.தி.க., அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து கூட்டாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றால்தான் கிராமப்புறங்களில் மக்களின் அடிப்படை தேவைகளுக்கான வளர்ச்சிப்பணிகள் நடைபெறும். 

மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்றத்தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்று கிராமங்கள் வளர்ச்சி பெற இந்த உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு ‘முரசு’ சின்னத்திலும், கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னங்களிலும் வாக்களித்து அனைவரையும் வெற்றியடைய செய்திட வேண்டும் என்று வாக்காளப்பெருமக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

click me!