காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகத்திலும் மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என கர்நாடகாவிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
காவிரி விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா சார்பில் மத்திய அரசுக்கு அந்தந்த மாநிலங்களின் நிலைப்பாடுகளுக்கு தகுந்தபடி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. காவிரி விவகாரத்தில் எதிரெதிர் நிலைப்பாட்டை தமிழகமும் கர்நாடகமும் கொண்டுள்ளதால், பிரச்னை நீடித்து வருகிறது.
தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆளுநர் நியமித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை துணைவேந்தராக நியமித்ததற்கு தமிழக அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழர்களின் தன்மானத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இது என ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து கவிஞர் வைரமுத்துவும் டுவிட்டரில் வருத்தத்தை பதிவிட்டிருந்தார். பிரதமர் பதவிக்குத்தான் தமிழருக்கு தகுதியில்லை என்றால், துணைவேந்தர் பதவிக்குமா ஒரு தமிழருக்கு தகுதியில்லை? என வருத்தத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், காவிரி விவகாரத்தையும் துணைவேந்தர் நியமனத்தையும் இணைத்து விவேக் டுவீட் செய்துள்ளார். அதில்,
நாங்கள் கேட்பது நீரப்பா!
நீங்கள் தருவதோ சூரப்பா!
அண்ணன் தம்பிகள் நாமப்பா!
நம்மைப் பிரிப்பது நீராப்பா?
அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா!
அன்னைக் காவிரி வேணும்ப்பா.
என அவருக்கே உரிய பாணியில் டுவீட் செய்துள்ளார்.
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">நாங்கள் கேட்பது நீரப்பா!<br>நீங்கள் தருவதோ சூரப்பா!<br>அண்ணன் தம்பிகள் நாமப்பா!<br>நம்மைப் பிரிப்பது நீராப்பா?<br>அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா!<br>அன்னைக் காவிரி வேணும்ப்பா. <a href="https://t.co/ENNKfF05XY">pic.twitter.com/ENNKfF05XY</a></p>— Vivekh actor (@Actor_Vivek) <a href="https://twitter.com/Actor_Vivek/status/982459773114187777?ref_src=twsrc%5Etfw">April 7, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>