அண்ணாமலை… ஒத்தைக்கு ஒத்த வர்றீங்களா…? விவாதம் பண்ணலாம்… போட்டு தாக்கும் வேல்முருகன்

By manimegalai aFirst Published Oct 12, 2021, 7:38 AM IST
Highlights

புதிய வேளாண்மை சட்டம் பற்றி நேருக்கு நேர் விவாதம் நடத்த அண்ணாமலையுடன் தயார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறி உள்ளார்.

புதிய வேளாண்மை சட்டம் பற்றி நேருக்கு நேர் விவாதம் நடத்த அண்ணாமலையுடன் தயார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறி உள்ளார்.

நாட்டில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஓயவில்லை. தொடர்ந்து பல மாதங்களாக சட்டத்தை வாபஸ் பெற கோரி போராடி வருகின்றனர்.

அண்மையில் உத்தரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் நடத்திய போராட்டம், அதன்பின்னர் நடந்த வன்முறை அனைத்தும் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சட்டத்துக்கு பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை.

இந் நிலையில் புதிய வேளாண் சட்டம் பற்றி நேருக்கு நேர் விவாதம் செய்ய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தயாரா என்று வேல்முருகன் கேட்டுள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரான அவர் இந்த விவாதத்துக்கு தயார் என்று அறிவித்துள்ளார். ஆனால் வேல்முருகனின் சவாலை அண்ணாமலை ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை.

click me!