காதல் திருமணங்களை செய்யும் பெண்களை கடத்தி அச்சுறுத்தல் அரசியல் செய்யும் பாமக ராமதாஸை கைது செய்ய வேண்டும் என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
காதல் திருமணங்களை செய்யும் பெண்களை கடத்தி அச்சுறுத்தல் அரசியல் செய்யும் பாமக ராமதாஸை கைது செய்ய வேண்டும் என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கவுந்தர்பாடியை சேர்ந்தவர் செல்வன். இவரும் குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதியும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜோடி இதையடுத்து சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் இருவருக்கும் சுயமரியாதை திருமணம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த 40-க்கும் மேற்பட்டோர் திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகளை தாக்கிவிட்டு காதல் ஜோடியை காரில் கடத்தி சென்றனர். இளமதி இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று காதலனை மட்டும் மீட்டனர். அந்த இடத்தில் இளமதி இல்லை. இதனால் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி சேலம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜரானார். அவர் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தமிழகத்தில் சாதிமறுப்பு மற்றும் காதல் திருமணங்களை செய்யும் பெண்களை கடத்தி அச்சுறுத்தல் அரசியல் செய்யும் பாமக ராமதாஸ் அய்யாவை ஜெயலலிதா பாணியில் துணிச்சலாக முதல்வர் எடப்பாடி கைது செய்ய உத்தரவிட வேண்டும்’’என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சாதிமறுப்பு மற்றும் காதல் திருமணங்களை செய்யும் பெண்களை கடத்தி அச்சுறுத்தல் அரசியல் செய்யும் அய்யாவை பாணியில் துணிச்சலாக முதல்வர் கைது செய்யவேண்டும்
— Vanni Arasu (@VanniArasu_VCK)