பிரதமரை கொலைகாரன் என பேசிய வன்னியரசு.. கைவிலங்கு போட சொல்லி குவியும் வழக்குகள்.!

By vinoth kumarFirst Published Oct 18, 2021, 8:38 AM IST
Highlights

பிரதமர் மோடி 2000 இஸ்லாமியர்களை கொன்ற  கொலைகாரன் என வன்னியரசு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

பிரதமர் மோடியை, கொலைக்காரன் என பேசிய வன்னியரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பாஜகவினர் புகார் அளித்து வருகின்றனர். 

தமிழகத்தில் 3 நாட்களுக்கு முன்னர் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக பிரபல தனியார் தொலைக்காட்சி விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் திமுக சார்பில் சரவணன், வலதுசாரி நித்தியானந்தம், பத்திரிகையாளர் ஸ்ரீராம், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதையும் படிங்க;- ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு.. அதிமுக கனவில் மண்ணை வாரி போட்ட பாமக..!

இந்த விவாதத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு இன்று இந்து மதத்தில் இருந்து அம்பேத்கர் வெளியேறிய நாள் எங்களின் புனித நாள் என நிகழ்ச்சிக்கு சம்பந்தம் இல்லாமல் பேசினார். மேலும், பிரதமர் மோடி 2000 இஸ்லாமியர்களை கொன்ற  கொலைகாரன் என வன்னியரசு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இதையும் படிங்க;- முதல்வர் குறித்து அவதூறு.. நள்ளிரவில் வீடு புகுந்து பாஜக முக்கிய பிரமுகரை அலேக்கா தூக்கிய போலீஸ்..!

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசை கைது செய்யவேண்டும்  என பாஜகவினர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல்  ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர். அதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில்  பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்திருந்ததுடன், கொலைகாரன், திருடன் என ஒருமையில் பேசி அவமரியாதை செய்த வன்னியரசை கைது செய்ய வேண்டும் என புகார் அளித்து வருகின்றனர்.

click me!