மருத்துவமனையில் இருந்து தடுப்பூசி மையங்கள் அகற்றப்பட வேண்டும்... உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

By Thiraviaraj RMFirst Published May 12, 2021, 4:34 PM IST
Highlights

மருத்துவமனைகளிலிருந்து தடுப்பூசி மையங்கள் அகற்றப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவமனைகளிலிருந்து தடுப்பூசி மையங்கள் அகற்றப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவல் தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களை அகற்ற தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக சிறப்பு வசதி செய்ய வேண்டும் என்றும், தடுப்பூசி கொள்முதலுக்குடெண்டர் கோருவது தொடர்பாக விளக்கமளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அதேபோல், கொரோனாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டையும் தெரிவித்தனர்.
 

click me!