திமுக அமைச்சர்கள் இரண்டு பேர் ஜெயிலுக்கு போக போறாங்க! செந்தில் பாலாஜிக்கு அடுத்து யார் தெரியுமா? H.ராஜா தகவல்

By vinoth kumarFirst Published Jan 20, 2023, 9:12 AM IST
Highlights

அதிமுக சின்னம் குறித்து நான் கருத்து கூற முடியாது. இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் செல்வாக்கு கொண்ட தலைவர்கள்தான். இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிக்க பொன்னான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது.

இந்துக்களின் சொத்துக்களை பறித்து அவர்களை வீதியில் நிறுத்தும் வகையில் வக்ஃபு வாரியத்தின் நடவடிக்கை இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக  தலைமை அலுவலகமான கமலாலயத்தில் எச்.ராஜா பேட்டியளிக்கையில்;- ஈரோடு இடைத்தேர்தல் குறித்து கடலூரில் பாஜக செயற்குழு கூடி விவாதித்து முடிவு எடுக்கப்படும். இடைத்தேர்தலுக்காக தேர்தல் பணிக்கு பாஜக சார்பில் குழு அமைத்தது முதல்கட்ட தேர்தல் பணி, கூட்டணி கட்சி போட்டியிட்டாலும் இதுபோல குழு அமைப்போம். அண்ணாமலை இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்த கற்பனை, வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை என்றார். 

இதையும் படிங்க;- வாக்குறுதி அளித்து 2 வருஷம் ஆச்சு.. மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு? திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் திணறும் திமுக

தமிழ்நாட்டில் அமலில் இருப்பது ஸ்டாலின் ஆட்சியா, மாலிக்கபூர் ஆட்சியா எனும் சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்துக்களின் சொத்துக்களை பறித்து அவர்களை வீதியில் நிறுத்தும் வகையில் வக்ஃபு வாரியத்தின் நடவடிக்கை இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் வக்ஃபு  வாரிய சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் சமூகவலைதளம் மூலம் எங்களிடம் புகாரை பதிவு செய்யலாம். 

அதிமுக சின்னம் குறித்து நான் கருத்து கூற முடியாது. இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் செல்வாக்கு கொண்ட தலைவர்கள்தான். இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிக்க பொன்னான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது. திமுக இடைத்தேர்தலில் தோற்றல் ஸ்டாலினும், உதயநிதியும் பேசுவதற்கு எதுவுமே இருக்காது. இந்து விரோத திமுகவின் ஆபாச ஆ.ராசாவும், விபசாரத்திற்கு புது வார்த்தை கண்டறிந்த ஒருவரும் நாங்கள் இந்து எதிரி அல்ல, நாங்கள் பார்ப்பனர்களுக்குத்தான் எதிரி என்கின்றனர். 

இதையும் படிங்க;-  திமுக பேச்சாளர் மீது நீதிமன்றத்தில் திடீர் வழக்கு.! அதிரடி நடவடிக்கை எடுத்த ஆளுநர்..! அதிர்ச்சியில் ஸ்டாலின்

சிறைக்கு செல்ல உள்ள மூவரில் செந்தில் பாலாஜிக்கு அடுத்த இடத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் இருக்கிறார். ஆவடி நாசர் 6 மாதம் மாடு மேய்த்து பால் கறந்து, ஒரு லிட்டர் பால் 36 ரூபாயில் லாபம் கிடைக்குமா என கூற வேண்டும் என எச்.ராஜா கூறினார். 

click me!